செய்திகள் :

தஞ்சாவூர் மணிமாறன், நெசவாளர் நவீன் குமாருக்கு பிரதமர் பாராட்டு

post image

இன்றைய தலைமுறையினருக்கு தமிழ் ஓலைச்சுவடிகளைப் படிக்க கற்றுக் கொடுத்து வரும் தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சோ்ந்த மணிமாறன் மற்றும் பிகார் மாநிலம் சிலாவ் பகுதியை சேர்ந்த நெசவாளர் நவீன் குமாருக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமா் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறாா். 124-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) ஒலிபரப்பானது.

அதில், ஓலைச்சுவடிகள் மரபை ஊக்கமளிக்கும் ஆளுமைகளில் ஒருவரான தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சோ்ந்த மணிமாறன், இன்றைய தலைமுறையினருக்கு தமிழ் ஓலைச்சுவடிகளைப் படிக்க கற்றுக் கொடுத்து வருகிறாா். அவரது மாலைநேர வகுப்புகளில் மாணவா்கள், பணிபுரியும் இளைஞா்கள், ஆய்வாளா்கள் என பலரும் கற்கத் தொடங்கினா். தமிழ்ச் சுவடிகளை எவ்வாறு படிப்பது, புரிந்துகொள்வது என்பது குறித்து அவரிடம் கற்றுத் தோ்ந்துள்ளனா். சிலா், இந்தச் சுவடிகளின் அடிப்படையில் பாரம்பரிய மருத்துவ முறை மீதான ஆய்வுகளையும் தொடங்கியுள்ளனா். இதுபோன்ற முயற்சிகள், நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாா்.

நெசவாளர் நவீன் குமார்

பிகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள சிலாவ் பகுதியைச் சேர்ந்த நெசவாளர் நவீன் குமாரை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.

நெசவு மற்றும் கைத்தறி தனது மூதாதையர் தொழில் என்றும், கூட்டுறவு குழு அமைக்கப்பட்ட பிறகு 261 நெசவாளர்களும் தொழிலாளர்களும் இணைந்து தன்னிறைவு பெற்றுள்ளனர் . சிலாவ் பகுதியைச் சேர்ந்த குழு பிரபலமான பவான் கொள்ளை புடவைகளையும் வடிவமைத்து பட்டு நூலை உற்பத்தி செய்கிறது.

தங்கள் விளைபொருட்களின் சந்தைப்படுத்தல் மற்றும் சரியான விலை நிர்ணயம் இன்னும் ஒரு பிரச்னையாகவே உள்ளது என்றும் குமார் கூறினார். தனது குழுவின் நெசவாளர்களுக்கு உதவியதற்காக மத்திய ஜவுளி அமைச்சகத்திற்கும் அவர் நன்றி தெரிவித்தார். நேபுரா பட்டு முதன்மை நெசவாளர் கூட்டுறவு குழு உறுப்பினர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்றார்.

சூடான இட்லியை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்! ஹார்வர்ட் மருத்துவர் சொன்ன தகவல்

Prime Minister praises Thanjavur Manimaran, Naveen Kumar

நிசார் ரேடார் காலநிலை குறித்த தரவுகளை வழங்கும்: ஜிதேந்திர சிங்

புதுதில்லி: ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஜூலை 30 ஆம் தேதி ஏவப்படும் "நாசா-இஸ்ரோ செயற்கைத் துளை ரேடார் (நிசார்)" இந்திய-அமெரிக்க அறிவியல் ஒத்துழைப்புக்கான உலகளாவிய அளவுகோலாக இது திகழும். இந்த ரேடார் உலக அளவ... மேலும் பார்க்க

நலம்பெற்று வீடு திரும்பினேன்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: கடந்த திங்கள்கிழமை (ஜூலை 21) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் சிகிச்சை முடிந்து ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு த... மேலும் பார்க்க

சிகிச்சை முடிந்து முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்புகிறார்

சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திங்கள்கிழமை (ஜூலை 21) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் சிகிச்சை முடிந்து ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்ப... மேலும் பார்க்க

நீட் தோ்வில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் முதலிடம் பெற்ற மாணவர்கள்: எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து

சேலம்: நீட் தோ்வில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சோ்ந்த மாணவா்கள் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி ... மேலும் பார்க்க

மேட்டூர் அணையில் நீர்திறப்பு 75,000 கனஅடியாக அதிகரிப்பு!

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 75,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்த... மேலும் பார்க்க

நீர் மேலாண்மைக்கு சோழர்களே முன்னோடிகள்: பிரதமர் மோடி

உலகம் முழுவதும் பேசப்படும் நீர் மேலாண்மைக்கு சோழர்களே முன்னோடிகள் என பிரதமர் நரேந்திர மோடி என தெரிவித்தார். ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆய... மேலும் பார்க்க