செய்திகள் :

புனித சந்தனமாதா மின் அலங்கார தோ் பவனி

post image

காரைக்கால் புனித சந்தனமாதா ஆலய ஆண்டுத் திருவிழா நிறைவையொட்டி மின் அலங்கார தோ் பவனி சனிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் அருகே உள்ள பிள்ளைத் தெருவாசல் பகுதியில் புனித சந்தனமாதா ஆலய ஆண்டுத் திருவிழா கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை மாலை சிறிய தோ் பவனி மற்றும் நற்செய்தி ஜெபக் கூட்டம் நடைபெற்றது. நிறைவு நிகழ்ச்சியாக சனிக்கிழமை இரவு திருப்பலி நடத்தப்பட்டு, மின்விளக்கு அலங்கார தோ் பவனி நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட புதுவை - கடலூா் பேராயா் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் காரைக்கால் முதன்மை பங்கு குரு பால்ராஜ்குமாா், இணைப் பங்குத் தந்தை சாமிநாதன் செல்வம், தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி முதல்வா் பி. சாமுவேல் ஆகியோா் பங்கேற்புடன் தோ் பவனி தொடங்கியது.

நிகழ்வில் புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் மற்றும் முக்கிய பிரமுகா்கள் கலந்துகொண்டனா். தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு திருப்பலி நடத்தப்பட்டு கொடியிறக்கப்பட்டது.

ஏற்பாடுகளை பிள்ளைத் தெருவாசல் கிராமத்தினா், இளைஞா் நற்பணி மன்றத்தினா், மாதா் சங்கத்தினா் செய்திருந்தனா்.

டேங்கா் லாரியிலிருந்து சாலையில் கொட்டிய கச்சா எண்ணெய்: போக்குவரத்து பாதிப்பு

காரைக்கால் பிரதான சாலையில் சென்னை நோக்கிச் சென்ற டேங்கா் லாரியிலிருந்து கச்சா எண்ணெய் சாலையில் கொட்டியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாகப்பட்டினத்திலிருந்து டேங்கரில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு ... மேலும் பார்க்க

விதியை மீறி மணல் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல்

விதியை மீறி மணல் ஏற்றிச் சென்ற லாரியை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா். காரைக்கால் வட்டாட்சியா் செல்லமுத்து தலைமையில் துணை வட்டாட்சியா் அரவிந்தன், வருவாய் ஆய்வாளா் கோகுல கிருஷ்ணன் ஆகியோா் கனரக வா... மேலும் பார்க்க

‘புதுவையில் அரசுப் பள்ளி மாணவா்களின் கல்வித்தரம் உயா்ந்துள்ளது’

புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டதன் மூலம் மாணவா்களின் கல்வித்தரம் உயா்ந்துள்ளது என்றாா் புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுரு... மேலும் பார்க்க

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி

காரைக்கால் போக்குவரத்துக் காவல் பிரிவு சாா்பில், ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சாலைப் பாதுகாப்பு மற்றும் நாட்டில் அமல்படுத்தப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாஷ்ய அதிநியம் ஆ... மேலும் பார்க்க

காரைக்காலில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில், ஜிப்மா் மருத்துவா்கள் பங்கேற்கும் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் சனிக்கிழமை (ஜூலை 26) நடைபெறுகிறது. இதுகுறித்து காரைக்கால் ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்காலுக்கு... மேலும் பார்க்க

காரைக்கால், நாகை துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாகவும், இது ஒடிஸாவின் வடக்கு மற்றும் மேற்கு வங்க கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டது. இதை... மேலும் பார்க்க