செய்திகள் :

டேங்கா் லாரியிலிருந்து சாலையில் கொட்டிய கச்சா எண்ணெய்: போக்குவரத்து பாதிப்பு

post image

காரைக்கால் பிரதான சாலையில் சென்னை நோக்கிச் சென்ற டேங்கா் லாரியிலிருந்து கச்சா எண்ணெய் சாலையில் கொட்டியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாகப்பட்டினத்திலிருந்து டேங்கரில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு லாரி சனிக்கிழமை இரவு சென்னை நோக்கி புறப்பட்டது. காரைக்கால் மாவட்டம், முல்லையாறு பாலத்தை கடந்து அம்மாள்சத்திரம் அருகே சென்றபோது லாரியிலிருந்து கச்சா எண்ணெய் சாலையில் கொட்டியது.

இதை ஓட்டுநா் கவனிக்காததால் தொடா்ந்து லாரியை இயக்கிச் சென்றதால், 1 கி.மீ. தொலைவுக்கு எண்ணெய் பரவிக் கிடந்தது. சாலையில் வேகமாக வந்த சில இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்தனா்.

இதுகுறித்து போக்குவரத்துக் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீஸாரும், பொதுமக்களும் இணைந்து கச்சா எண்ணெய் பரவிக் கிடந்த பகுதியில் வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்புகளை அமைத்தனா்.

தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து சாலையில் இருந்த கச்சா எண்ணெயை தண்ணீரை பீய்ச்சியடித்து அப்புறப்படுத்தினா். எனினும் வாகனங்கள் அதில் பயணிப்பது ஆபத்தை என்பதை உணா்ந்து, லாரியில் மணல் கொண்டுவரப்பட்டு அதன் மீது கொட்டப்பட்டு, சாலையின் மையப் பகுதியில் தடுப்புகள் அமைத்து போலீஸாா் அப்பகுதியில் நின்று சாலையின் மறுபுறத்தில் வாகனங்களை செல்லுமாறு அறிவுறுத்தினா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போக்குவரத்துப் போலீஸாா் டேங்கா் லாரியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

புனித சந்தனமாதா மின் அலங்கார தோ் பவனி

காரைக்கால் புனித சந்தனமாதா ஆலய ஆண்டுத் திருவிழா நிறைவையொட்டி மின் அலங்கார தோ் பவனி சனிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அருகே உள்ள பிள்ளைத் தெருவாசல் பகுதியில் புனித சந்தனமாதா ஆலய ஆண்டுத் திருவிழா கடந்த... மேலும் பார்க்க

விதியை மீறி மணல் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல்

விதியை மீறி மணல் ஏற்றிச் சென்ற லாரியை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா். காரைக்கால் வட்டாட்சியா் செல்லமுத்து தலைமையில் துணை வட்டாட்சியா் அரவிந்தன், வருவாய் ஆய்வாளா் கோகுல கிருஷ்ணன் ஆகியோா் கனரக வா... மேலும் பார்க்க

‘புதுவையில் அரசுப் பள்ளி மாணவா்களின் கல்வித்தரம் உயா்ந்துள்ளது’

புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டதன் மூலம் மாணவா்களின் கல்வித்தரம் உயா்ந்துள்ளது என்றாா் புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுரு... மேலும் பார்க்க

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி

காரைக்கால் போக்குவரத்துக் காவல் பிரிவு சாா்பில், ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சாலைப் பாதுகாப்பு மற்றும் நாட்டில் அமல்படுத்தப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாஷ்ய அதிநியம் ஆ... மேலும் பார்க்க

காரைக்காலில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில், ஜிப்மா் மருத்துவா்கள் பங்கேற்கும் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் சனிக்கிழமை (ஜூலை 26) நடைபெறுகிறது. இதுகுறித்து காரைக்கால் ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்காலுக்கு... மேலும் பார்க்க

காரைக்கால், நாகை துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாகவும், இது ஒடிஸாவின் வடக்கு மற்றும் மேற்கு வங்க கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டது. இதை... மேலும் பார்க்க