செய்திகள் :

Tiger: பைக்காரவை தொடர்ந்து முதுமலையில் இறந்து கிடந்த ஆண் புலி... தொடரும் சோகம்!

post image

வங்கப் புலிகளின் வாழிடத்தில் உலக அளவில் மிக முக்கிய பகுதியாக நீலகிரி உயர்ச்சூழல் மண்டலம் விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் முதுமலை& சத்தியமங்கலம் , கேரளாவின் முத்தங்கா, கர்நாடகாவின் பந்திப்பூர் ஆகிய அடர் வனப் பகுதிகளை உள்ளடக்கிய‌ இந்த பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. ஆனால், அவற்றுக்கான வாழிட எல்லை பற்றாக்குறையாகவே இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வனத்தை விட்டு வெளியேற்றப்படும் புலிகள் பெருந்தோட்டங்களில் வாழிட எல்லைகளை வகுத்துக் கொண்டு தஞ்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இறந்து கிடந்த ஆண் புலி

நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, கூடலூர் ஆகிய பகுதிகளில் தனியார் பெருந்தோட்டங்களில் மர்மமான முறையில் புலிகள் இறப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், சுமார் 8 வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று பைக்காரா வனப்பகுதியில் கடந்த 30 - ம்‌ தேதி இறந்து கிடப்பதை வனத்துறையினர் கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சீகூர் வனப்பகுதியில் இளம் ஆண் புலி ஒன்று பரிதாபமாக உயிரிழந்துளள்ளது.

இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், " பைக்காரா வன பகுதியில் இறந்து கிடந்த ஆண் புலியின் உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இறப்புக்கான காரணம் விரைவில் தெரியவரும். இதே போல் தற்போது முதுமலையில் இறந்து கிடக்கும் புலியின் குறித்தும்

இறந்து கிடந்த ஆண் புலி

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் உடற்கூறாய்வு மற்றும் மற்ற ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். இறந்து கிடந்த இரண்டு புலிகளின் உடலில் இருந்தும் நகம், பல் போன்றவை வெட்டி எடுக்கப்படவில்லை" எனக் குறிப்பிட்டு இருக்கின்றனர்.

``லஞ்சம் தராவிட்டால்.." - மிரட்டிய ஐஆர்எஸ் அதிகாரி; சிபிஐ வலையில் சிக்கியது எப்படி?

டெல்லியில் வருமான வரி செலுத்துவோர் சேவை துறை இயக்குநரகத்தின் கூடுதல் டைரக்டர் ஜெனரலாக பணியாற்றுபவர் அமித் குமார் சிங்கால். இவர் மீது டெல்லியில் லாபினோவின் பீட்சா நிறுவனத்தின் உரிமையாளர் சனம் கபூர் என்... மேலும் பார்க்க

``திருமணமான பெண் `திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை' என்று கூற முடியாது..'' - உச்ச நீதிமன்றம்

திருமணமாகி கணவரை பிரிந்திருக்கும் பெண்கள் சில நேரங்களில் தங்களது ஆண் நண்பர் தங்களை திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக குற்றம் சாட்டுவதுண்டு. இது போன்ற குற்றச்சாட்டுகள் நீதிமன்றங்ககளில்... மேலும் பார்க்க

`அரிய வகை உடும்புகள்; ஹைட்ரோபோனிக் கஞ்சா..' - விமானத்தில் தொடரும் கடத்தல் சம்பவங்கள்

மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த பேட்டிக் ஏர் விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவரது உடமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்ப... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: கடத்திவரப்பட்ட 100 கிலோ கஞ்சா மூட்டைகள் - கேரள இளைஞர்கள் 2 பேர் கைது

வெளிமாநிலங்களில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்துக்குள் கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் கடத்திவரப்படுவதாக அம்மாவட்ட போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக, போதைப்பொருள் கடத்தல்காரர்களை கையும் களவுமாக... மேலும் பார்க்க

Pakistan: பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம்; 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்... என்ன நடந்தது?

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது கராச்சியிலுள்ள சிறையிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியுள்ளனர்.பாகிஸ்தான் கராச்சி நகரத்துக்கு அருகில் நேற்று (ஜூன் 2) இரவு நிலநடுக்கம் ஏற்பட்டி... மேலும் பார்க்க

வாணியம்பாடி: பல் சிகிச்சை; தொற்றுக்குள்ளாகி 8 பேர் மரணம் - சர்ச்சை கிளினிக்கிற்குப் பூட்டு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், `வி.டி.எஸ் - அறிவு பல் மருத்துவமனை’ என்கிற பெயரில், தனியார் கிளினிக் செயல்பட்டுவந்தது. இங்கு வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சேர்ந்த இந்திராணி (வயது 53) என்பவர்... மேலும் பார்க்க