செய்திகள் :

Ukraine War: "இந்தியா, சீனா, பிரேசில் மீது தடை விதிக்கப்படும்" - எச்சரிக்கும் நேட்டோ!

post image

இந்தியா, சீனா மற்றும் பிரேசில் நாடுகள் ரஷ்யா உடன் தொடர்ந்து வணிக உறவுகளைப் பேணுவதனால் இவற்றின்மீது இரண்டாம் நிலை பொருளாதார தடைகள் போடப்படும் என எச்சரித்துள்ளார் NATO பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே.

அமெரிக்க காங்கிரஸில் செனட்டர்களுடனான சந்திப்பில் இந்த மூன்று நாடுகள் ரஷ்ய அதிபர் புதினுடன் பேசி, உக்ரைன் உடனான அமைதிப்பேச்சுவார்த்தையை அவர் சீரியஸாக எடுத்துக்கொள்ளச் செய்யவேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Mark Rutte
Mark Rutte

"இந்த மூன்று நாடுகளுக்கும் நான் சொல்வது என்னவென்றால் நீங்கள் பெய்ஜிங் அல்லது டெல்லியில் வசிப்பவராக இருந்தால், பிரேசில் அதிபராக இருந்தால் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தவவேண்டியது மிக முக்கியமான ஒன்று. ஏனென்றால், இது உங்களையும் கடுமையாக பாதிக்கக்கூடும்" எனப் பேசியுள்ளார் அவர்.

மேலும் அவர், "எனவே தயவுசெய்து விளாடிமிர் புதினுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அவர் தீவிரமாக ஈடுபட வேண்டும் எனச் சொல்லுங்கள், இல்லையெனில், இது பிரேசில், இந்தியா மற்றும் சீனா மீது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்" என்றும் கூறியுள்ளார்.

Trump, Rutte
Trump, Rutte

முன்னதாக உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இன்னும் 50 நாட்களுக்குள் இதில் ஒரு சமாதானம் எட்டப்படவில்லை என்றால், ரஷ்யாவின் ஏற்றுமதிகளை வாங்கும் நாடுகள் மீது 100% பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இரண்டாம் நிலை வரி விதிக்கப்படுமெனப் பேசியதைத் தொடர்ந்து நேட்டோ பொதுச் செயலாளரும் அதேக் கருத்தைப் பேசியுள்ளார்.

சமாதானப் பேச்சுவார்த்தையில் உக்ரைன் நல்ல இடத்தில் இருப்பதை உறுதி செய்ய ஐரோப்பா நிதி வழங்கும் என்றும் அவர்க் கூறியிருந்தார்.

ட்ரம்ப் மற்றும் நேட்டோ இடையே ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டதனால் உக்ரைனுக்கு அமெரிக்கா சார்பில் வான் பாதுகாப்பு அமைப்புகள் மட்டுமல்லாமல் ஏவுகனைகளும், (ஐயோப்பாவின் பொருட்செலவில்) வெடிமருந்துகளும் பெருமளவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

`திரும்பப்பெறப்பட்ட வாகனம்; நடந்தே சென்ற டிஎஸ்பி’ - திமுக அரசை கண்டித்த அண்ணாமலை

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத் துறை டிஎஸ்பி சுந்தரேசன் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனம், எந்தக் காரணமும் கூறப்படாமல் திரும்பப்பெறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக, தனது இல்லத்தில் இருந... மேலும் பார்க்க

காமராஜர் விவகாரம்: 'குளிர்காய நினைக்கும் தீயவர்களுக்கு இடம் கொடுக்காதீர்' - ஸ்டாலின்

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா காமராஜரைப் பற்றி பேசிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.காமராஜர் அத... மேலும் பார்க்க

கழுகார்: குட்கா பிசினஸில் மோதிக்கொள்ளும் ஆளுங்கட்சி நிர்வாகிகள் டு மெளனம் காத்த இலைக் கட்சி நிர்வாகி

மோதிக்கொள்ளும் ஆளுங்கட்சி நிர்வாகிகள்!குட்கா பிசினஸில் போட்டி...பின்னலாடை நகரத்தில், வடமாநிலத் தொழிலாளர் அதிகம் என்பதால் அவர்களைக் குறிவைத்து சட்டவிரோத குட்கா விற்பனை அமோகமாக நடைபெற்றுவருகிறது. அந்தச்... மேலும் பார்க்க

`நோய் பாதித்த தெரு நாய்களைக் கருணைக் கொலை' - கேரள அரசின் அதிரடி முடிவு; காரணம் என்ன?

கேரள மாநிலத்தில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெரு நாய்கள் கடித்து குழந்தைகள் மரணமடையும் அதிர்ச்சி சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன. கேரளாவில் இந்த ஆண்டு மட்டும் தெரு... மேலும் பார்க்க

'கம்யூனிஸ்ட்களையே காணோம் என்றார், இந்த வாரம் கூட்டணிக்கு அழைக்கிறார்'- எடப்பாடிக்கு சிபிஎம் பதிலடி

2026 சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றனர்.திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு முனைப்பு காட்டி வருகி... மேலும் பார்க்க

`இங்க வந்திடுங்க’ - தாக்கரேவை அழைத்த பட்னாவிஸ்... மறைமுகமாக தாக்கிக்கொண்ட உத்தவ் - ஷிண்டே!

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் சட்டமேலவை எதிர்க்கட்சித் தலைவர் அம்பாதாஸ் தன்வேயிக்கு பிரிவு உபசார விழா நடந்தது. இதில் சிவசேனா உடைந்த பிறகு முதல் முறையாக துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும், முன்னாள் முதல்வர்... மேலும் பார்க்க