செய்திகள் :

US: கை, கால்களில் விலங்கிடும் அமெரிக்கா - வெள்ளை மாளிகை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ; மஸ்க் ரியாக்‌ஷன்

post image

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் முக்கியமானது, அமெரிக்காவில் சட்டவிரோதக் குடியேறிகளை நாட்டை விட்டு வெளியேற்றும் அறிவிப்பு. மெக்சிகோ, இந்தியா, கொலம்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மக்கள், கை, கால்களில் விலங்கிடப்பட்டு மனிதாபிமானமற்ற முறையில் அந்தந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். இதில், கொலம்பிய அரசு கொலம்பியர்களை கைவிலங்கிட்டு அனுப்பும் இராணுவ விமானத்தை கொலம்பியாவில் தரை இறங்குவதற்கான அனுமதியை மறுத்தது. மேலும், "எங்கள் நாட்டு குடிமக்களை இப்படி தரம் தாழ்ந்த முறையில் குற்றவாளிகளை போல கையாள்வதை நாங்கள் விரும்பவில்லை " - என அமெரிக்காவுக்கு செய்தி அனுப்பியது.

அதைத் தொடர்ந்து, கொலம்பியாவின் மீது அதிகமான வரிகளை விதிப்போம் என ட்ரம்ப் மிரட்டியும், தங்களின் சொந்த விமானப்படை விமானங்களை அமெரிக்காவுக்கு அனுப்பி, கண்ணியத்தோடு அவர்களை கொலம்பியாவுக்கு அழைத்து வந்தது. ஆனால், மூன்று முறை இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்ட இந்தியப் புலம்பெயர்ந்தவர்கள் மூன்றுமுறையும் கை, கால்கள் விலங்கிடப்பட்ட நிலையிலேயே அழைத்து வரப்பட்டிருக்கின்றனர். இது இந்தியர்களிடையே அதிர்ச்சியையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், அமெரிக்காவிலிருந்து திரும்பும் புலம்பெயர்ந்தவர்களுக்கு விமானநிலையத்தில் விலங்கிடப்படும் காட்சிகளை அமெரிக்க வெள்ளை மாளிகை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு, ``ASMR: Illegal Alien Deportation Fligh'' என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவத்தை `மனிதாபிமானமற்ற செயல்' என்று பலரும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் எலான் மஸ்க் இந்த வீடியோவுக்கு `Haha wow’ என ரிப்ளே செய்திருக்கிறார்,

Doctor Vikatan: எதைச் சாப்பிட்டாலும் வயிற்று உப்புசம்... என்னதான் காரணம், எப்படி சரிசெய்வது?

Doctor Vikatan: என்வயது 34. சைவ உணவுப் பழக்கம் உள்ளவன். நார்ச்சத்துக்காக காய்கறிகளும், புரதச்சத்துக்காகபருப்பு உணவுகளும்எடுத்துக்கொள்ளும்படிஎன்னை மருத்துவர் அறிவுறுத்தினார். ஆனால், இந்த இரண்டுமே எனக்க... மேலும் பார்க்க

Udhayanidhi Stalin: ``யார் அரசியல் செய்வது?'' -மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் உதயநிதி ஆதங்கம்!

தமிழ்நாட்டின் பள்ளிகளில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக்கொள்கையின்படி, மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் கல்விக்காக வழங்கப்பட்டுவந்த நிதியை நிறுத்தியுள்ளார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். இது இ... மேலும் பார்க்க

``உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்; இந்த விளையாட்டு எங்களிடம் செல்லாது'' - நடிகர் பிரகாஷ்ராஜ்

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை உள்ளிட்டவைகளை வலியுறுத்தும் புதிய தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துமாறு மத்திய பா.ஜ.க அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் தன் எக்ஸ் பக்கத்தி... மேலும் பார்க்க

UP: ``ஆங்கிலம் அதிகாரத்தை அடையும் ஆயுதம்'' - மாணவர்களிடம் ராகுல் காந்தி பேச்சு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரபிரதேசம் மாநிலம் ரேபரேலியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் மாணவர்களுக்கு ஆங்கிலம் படிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஆங்கில மொழியின் மதிப்பையும் எடுத்து... மேலும் பார்க்க

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக வெளியான தகவலில், 78 வயதாகும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந... மேலும் பார்க்க