செய்திகள் :

WPL: `RCB-யில் ஒரு தோனி' - குஜராத் ஜெயன்ட்ஸ்-ஐ புரட்டியெடுத்த ரிச்சா கோஷ்... குவியும் பாராட்டுகள்!

post image

மகளிர் பிரீமியர் லீக் (WPL) மூன்றாவது சீசன் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு (RCB) அணியும், குஜராத் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஆஷ்லீ கார்ட்னர் 79 ரன்களும், பெத் மூனி 56 ரன்களும் அடித்தனர். பெங்களூரு அணியில் ரேணுகா சிங் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஸ்மிருதி மந்தனா - ஆஷ்லீ கார்ட்னர்

பின்னர், 202 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணியில், கேப்டன் ஸ்மிருதி மந்தனா இரண்டாவது ஓவரிலேயே 9 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியைத் தந்தார். அதே ஓவரில் மேலும் ஒரு விக்கெட் விழுந்தது. அதையடுத்து, எலிஸ் பெர்ரி அதிரடியாக ஆடி 34 பந்துகளில் 57 ரன்கள் அடித்து ஆட்டத்தின் 13-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

அணியின் வெற்றிக்கு 46 பந்துகளில் 93 ரன்கள் தேவை என்ற அந்த சமயத்தில், ரிச்சா கோஷ் - கனிகா அகுஜா கூட்டணி குஜராத் வீராங்கனைகளை பவுண்டரி லைன்களுக்கு ஓடவைத்துக் கொண்டே இருந்தனர். இருவரின் அதிரடியில் 9 பந்துகள் மீதம் வைத்து 18.3 ஓவர்களிலேயே 202 ரன்கள் என்ற இலக்கை அடைந்து வெற்றிபெற்றது பெங்களூரு அணி.

ரிச்சா கோஷ் - கனிகா அகுஜா
ரிச்சா கோஷ் - கனிகா அகுஜா

ரிச்சா கோஷ் 27 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சர் என 64 ரன்களும், கனிகா அகுஜா 13 பந்துகளில் 30 ரன்களும் அடித்து மிரட்டினர். ஆட்ட நாயகி விருது வென்ற ரிச்சா கோஷ், தன் இயல்பான ஆட்டத்தில் கவனம் செலுத்த விரும்பியதாகவும், இலக்கை வெற்றிகரமாக அடைவோம் என்ற நம்பிக்கை இருந்ததாகவும் போட்டிக்குப் பின்னர் தெரிவித்தார். மறுபக்கம், இந்த வெற்றியின் மூலம் மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் 200 ரன்களுக்கு மேற்பட்ட இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்த முதல் அணி என்ற சாதனையை பெங்களூரு அணி படைத்திருக்கிறது.

இந்த நிலையில், ரிச்சா கோஷை தோனியின் மறு உருவம் எனப் பலரும் கொண்டாடி வருகின்றனர். இருவருமே விக்கெட் கீப்பர் பேட்டர்கள் என்பதால் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தோனியுடன் ரிச்சா கோஷை ஒப்பிட்டுக் கொண்டாடி வருகின்றனர்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Champions Trophy: 29 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானில் ICC தொடர்; களமிறங்கும் டாப் 8 அணிகள்- முழு விவரம்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்று (பிப்ரவரி 19) தொடங்குகிறது.1996 க்குப் பிறகு 29 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் பாகிஸ்தானில் ஐசிசி தொடர் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் பாக... மேலும் பார்க்க

கோலிக்கே 4-வது இடம்தான்; சாம்பியன்ஸ் டிராபி பரிசுத்தொகையை விட அதிக சம்பளம் பெறும் 6 IPL வீரர்கள்!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19-ம் தேதி பாகிஸ்தானில் (இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும்) தொடங்கவிருக்கிறது. ஒருநாள் போட்டியில் டாப் 8 அணிகள் மட்டும் பங்கேற்கும் இந்த சாம்பியன்ஸ் ... மேலும் பார்க்க

Rahane: ``யாரும் என்னிடம் அதைப் பற்றிக் கூறவில்லை" - இப்போது வருந்தும் ரஹானே

இந்திய டெஸ்ட் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்த அளவில் ஒரு சில பேட்ஸ்மேன்கள் மட்டுமே சாலிட் டிஃபென்ஸ் ஆடக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.அதுவும் சச்சின், டிராவிட், லக்ஷ்மன் போன்றோருக்குப் பிறகு இந்திய ... மேலும் பார்க்க

"இந்திய அணியில் சூப்பர் ஸ்டார் கலாசாரத்தை நாம் ஊக்குவிக்கக் கூடாது; நாங்கள் வெறும்.."- அஸ்வின் பளீச்

கிரிக்கெட் என்னதான் குழு ஆட்டமாக இருந்தாலும், 11 பேரும் ஒத்துழைத்தால்தான் வெற்றி நிச்சயம் என்றாலும் தனிமனித துதிபாடலே அதிகமாக இருக்கிறது. அதுவும், கிரிக்கெட் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு பெரும் வணி... மேலும் பார்க்க

Babar Azam: "தயவு செய்து என்னை இப்படி அழைக்காதீர்கள்" - ரசிகர்களுக்கு பாபர் அசாமின் வேண்டுகோள் என்ன?

ஒருநாள் போட்டி தரவரிசையில் டாப் 8 அணிகள் மட்டும் பங்கேற்கும் ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடர், பிப்ரவரி 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்கவிருக்கிறது.இதில், இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்தத... மேலும் பார்க்க

Rishabh Pant : அன்று ரிஷப் பண்ட் உயிரைக் காப்பாற்றிய இளைஞர்... இன்று உயிருக்குப் போராட்டம்

இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட், 2022 டிசம்பரில் டெல்லியிலிருந்து உத்தரகாண்ட்டுக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியிருந்தார். அப்போது... மேலும் பார்க்க