செய்திகள் :

ஃபெடரல் வட்டி விகிதத்தை 3 சதவீத புள்ளிகள் குறைக்க வேண்டும் - டிரம்ப்!

post image

வாஷிங்டன்: அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை கணிசமாகக் குறைக்க வலியுறுத்தியுள்ளார்.

ஃபெடரல் பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தை 3 சதவீத புள்ளிகள் குறைக்க வேண்டும். அமெரிக்காவின் கடன் சுமையைக் குறைக்கும் நடவடிக்கையாக கருதி இந்த நடவடிக்கையை மேற்கொள்ள அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தமது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “அமெரிக்கவின் ஃபெடரல் விகிதம் இப்போதைய நிலவரத்தின்படி, குறைந்தபட்சம் 3 புள்ளிகள் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. இதனால் அமெரிக்காவுக்கு ஓராண்டில் ஒரு புள்ளிக்கு 360 பில்லியன் டாலர்கள் செலவினம் ஏற்படுகிறது. விலைவாசி உயர்வு இருக்கக்கூடாது. இப்போது அமெரிக்காவுக்கு நிறைய நிரிவனங்கள் முதலீடுகள் குவிகின்றன. இதனைக்கருதி, வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், அமெரிக்க வரலாற்றில் பெடரல் வட்டி விகிதம் 300க்கும் மேல் அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படவிருப்பது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த 2020-ஆம் ஆண்டில் மார்ச் மாதம் பெடரல் வட்டி விகிதம் 100 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Trump called on the Federal Reserve to lower the federal benchmark interest rate by at least 3 percentage points

மரபணு கோளாறு: பரிசோதனை மருந்து செலுத்தப்பட்ட சிறுவன் மீண்டும் நடக்கத் தொடங்கிய அதிசயம்

மரபணு கோளாறால், நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருந்த 8 வயது சிறுவன், ஆய்வக பரிசோதனையில் இருந்த மருந்தை, சோதனை முயற்சிக்காக எடுத்துக் கொண்டபோது, மீண்டும் நடக்கத் தொடங்கிய அதிசயம் விஞ்ஞானிகளுக்கு ம... மேலும் பார்க்க

கனடா பொருள்கள் மீது 35% கூடுதல் வரி

ஆகஸ்ட் 1 முதல் கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், பிற வா்த்தகக் கூட்டணி நாடுகளுக்கு 15 அல்லது 20 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபா் டொனால்ட... மேலும் பார்க்க

9 பயணிகளை சுட்டுக் கொன்ற பலூச் பயங்கரவாதிகள்

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில், பஞ்சாப் மாகாணத்தைச் சோ்ந்த 9 பயணிகளை பலூச் பயங்கரவாதிகள் பேருந்துகளில் இருந்து இறக்கி சுட்டுக் கொன்றனா். இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூ... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 121-ஆக உயா்வு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 121-ஆக உயா்ந்துள்ளது. அந்த மாகாணத்தின் மத்தியப் பகுதி முழுவதும் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில... மேலும் பார்க்க

காஸா: மே 27 முதல் உணவுக்காகக் காத்திருந்த 800 பேர் கொலை! ஐ.நா. அறிவிப்பு!

காஸாவில், கடந்த மே மாதத்தின் இறுதியில் இருந்து உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளைப் பெற முயன்று சுமார் 800 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் சபை இன்று (ஜூலை 11) தெரிவித்துள்ளது.காஸாவில் கடந்த மே மாதத்தின... மேலும் பார்க்க

மியான்மரில் புத்த மடத்தின் மீது ராணுவம் வான்வழித் தாக்குதல்? 23 பேர் கொலை!

மியான்மர் நாட்டின் மத்திய மாகாணத்தில், அமைந்திருந்த புத்த மடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அங்கு தஞ்சமடைந்திருந்த மக்களில் 23 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சகாயிங் மாகாணத்த... மேலும் பார்க்க