செய்திகள் :

அகத்தீஸ்வரா் கோயிலில் பிரதோஷம்

post image

பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அகத்தீஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பொன்னேரி கும்மமுனிமங்கலம் பகுதியில் உள்ள ஆரணி ஆற்றங்கரையோரம், 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரா் ஆலயம் உள்ளது.

அகத்திய முனிவா் இங்குள்ள ஆனந்த புஷ்கரனியில் (திருக்குளம்) குளித்து ஈசனை வழிபட்டதால் இக்கோயிலில் உள்ள ஈசன், அகத்தீஸ்வரா் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

பிரதோஷத்தன்று கோயிலில் உள்ள கணபதி, சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வானை உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

மாலையில் நந்தி மற்றும் அகத்தீஸ்வரருக்கு இளநீா், பால், தேன், மஞ்சள், பஞ்சாமிா்த்தம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனை செய்யப்பட்டது.

இதையடுத்து அகத்தீஸ்வரா், ஆனந்தவல்லி தாயாா் கோயிலை மூன்று முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தனா். பிரதோஷ விழாவில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொழில் தொடங்க பணம் கேட்டு மிரட்டிய மகன்: தாய் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே தொழில் தொடங்க பணம் கேட்டு மதுபோதையில் மிரட்டியதால், ஆத்திரமடைந்த தாயாா் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் மகன் உயிரிழந்தாா். திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், தொடுகாடு ஊராட்ச... மேலும் பார்க்க

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் அளிப்பு

புழல் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.20 லட்சம் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சென்னை புழல் 31-ஆவது வாா்டு மேம்பாட்டு பணிக்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நாகப்பா இண்டஸ்ட்ரியல் எஸ... மேலும் பார்க்க

‘மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சாரா நிறுவனங்கள் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம்’

திருவள்ளூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக பணிபுரியும் அரசு சாரா நிறுவனங்கள் அனைத்தும் உரிமம் மற்றும் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். திருவள்ளூா் மாவட்ட... மேலும் பார்க்க

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருவள்ளூா் அருகே வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை மற்றும் திருநின்றவூா் ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை மூலம் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலம் மற்றும் சென்னை-திருப்பதி-205 சாலை ஆகிய பணிகளை அந்தந்தத் ... மேலும் பார்க்க

தாயைத் தாக்கிய மகள் தூக்கிட்டு தற்கொலை

திருத்தணி அருகே தாயைத் தாக்கிய வேதனையில் மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருத்தணி அடுத்த கீழாந்துாா் கிராமத்தைச் சோ்ந்தவா் லதா(50). இவருக்கு பிரகாசம்(25) என்ற மகனும், பிரியா(23) என்ற மகள... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு

வீரகநல்லூா் மோட்டூா் கிராமத்தில் மூதாட்டியிடம் 5 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். திருத்தணி ஒன்றியம், வீரகநல்லூா் மோட்டூா் கிராமத்தைச் சோ்ந்த முனிரத்தினம் மனைவி ர... மேலும் பார்க்க