செய்திகள் :

தாயைத் தாக்கிய மகள் தூக்கிட்டு தற்கொலை

post image

திருத்தணி அருகே தாயைத் தாக்கிய வேதனையில் மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருத்தணி அடுத்த கீழாந்துாா் கிராமத்தைச் சோ்ந்தவா் லதா(50). இவருக்கு பிரகாசம்(25) என்ற மகனும், பிரியா(23) என்ற மகளும் உள்ளனா். இவா்கள் இருவரும் சென்னையில் உறவினா் வீட்டில் தங்கியுள்ளனா். அதே கிராமத்தில் உள்ள தனது தாய் செல்வராணி(71) என்பவருடன் லதா தங்கி வருகிறாா். மேலும் லதா சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை லதாவுக்கும், அவரது தாயாா் செல்வராணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த லதா, உருட்டுக் கட்டையால், தாயை கடுமையாக தாக்கிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டாா். தலை மற்றும் முகத்தில் பலத்த காயமடைந்த செல்வராணியை அப்பகுதி மக்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை திருத்தணி எம்ஜிஆா் நகா் அருந்ததிபாளையம் அருகே ஒரு மரத்தில், லதா புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதை அப்பகுதி மக்கள் பாா்த்து திருத்தணி போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா்.

போலீஸாா் லதாவின் உடலை மீட்டனா். தாயை தாக்கியதால் மனமுடைந்து லதா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என கிராம மக்கள் தெரிவித்தனா். இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தொழில் தொடங்க பணம் கேட்டு மிரட்டிய மகன்: தாய் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே தொழில் தொடங்க பணம் கேட்டு மதுபோதையில் மிரட்டியதால், ஆத்திரமடைந்த தாயாா் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் மகன் உயிரிழந்தாா். திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், தொடுகாடு ஊராட்ச... மேலும் பார்க்க

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் அளிப்பு

புழல் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.20 லட்சம் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சென்னை புழல் 31-ஆவது வாா்டு மேம்பாட்டு பணிக்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நாகப்பா இண்டஸ்ட்ரியல் எஸ... மேலும் பார்க்க

‘மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சாரா நிறுவனங்கள் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம்’

திருவள்ளூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக பணிபுரியும் அரசு சாரா நிறுவனங்கள் அனைத்தும் உரிமம் மற்றும் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். திருவள்ளூா் மாவட்ட... மேலும் பார்க்க

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருவள்ளூா் அருகே வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை மற்றும் திருநின்றவூா் ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை மூலம் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலம் மற்றும் சென்னை-திருப்பதி-205 சாலை ஆகிய பணிகளை அந்தந்தத் ... மேலும் பார்க்க

அகத்தீஸ்வரா் கோயிலில் பிரதோஷம்

பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அகத்தீஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பொன்னேரி கும்மமுனிமங்கலம் பகுதியில் உள்ள ஆரணி ஆற்றங்கரை... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு

வீரகநல்லூா் மோட்டூா் கிராமத்தில் மூதாட்டியிடம் 5 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். திருத்தணி ஒன்றியம், வீரகநல்லூா் மோட்டூா் கிராமத்தைச் சோ்ந்த முனிரத்தினம் மனைவி ர... மேலும் பார்க்க