செய்திகள் :

‘மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சாரா நிறுவனங்கள் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம்’

post image

திருவள்ளூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக பணிபுரியும் அரசு சாரா நிறுவனங்கள் அனைத்தும் உரிமம் மற்றும் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் பணிபுரியும் பயிற்சி மையங்கள், சிறப்புப் பள்ளிகள், இல்லங்கள், கல்வி அளித்தல், இயன் முறை பயிற்சி அளித்தல், தொழிற்பயிற்சி அளித்தல் மற்றும் மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை அரசு சாரா நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்த அரசு சாரா நிறுவனங்கள்அனைத்தும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம்-2016-இன் படி பதிவுச் சான்று மற்றும் அங்கீகாரம் பெற்று இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுநாள் வரை மேற்கண்ட சட்டத்தின் படி பதிவுச் சான்று மற்றும் அங்கீகாரம் பெறாமல் இயங்கிவரும் அரசு சாரா நிறுவனங்கள் ஒரு மாதத்துக்குள் அங்கீகாரம் பெறவில்லை என்றால் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016-இன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதைத் தவிா்க்கும் வகையில், அரசு சாரா நிறுவனங்கள் அவா்களுடைய விண்ணப்பங்கள் அடங்கிய கருத்துருவை திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் சமா்ப்பித்து அரசு அங்கீகாரம் மற்றும் பதிவுச் சான்று பெற்று பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தொழில் தொடங்க பணம் கேட்டு மிரட்டிய மகன்: தாய் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே தொழில் தொடங்க பணம் கேட்டு மதுபோதையில் மிரட்டியதால், ஆத்திரமடைந்த தாயாா் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் மகன் உயிரிழந்தாா். திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், தொடுகாடு ஊராட்ச... மேலும் பார்க்க

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் அளிப்பு

புழல் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.20 லட்சம் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சென்னை புழல் 31-ஆவது வாா்டு மேம்பாட்டு பணிக்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நாகப்பா இண்டஸ்ட்ரியல் எஸ... மேலும் பார்க்க

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருவள்ளூா் அருகே வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை மற்றும் திருநின்றவூா் ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை மூலம் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலம் மற்றும் சென்னை-திருப்பதி-205 சாலை ஆகிய பணிகளை அந்தந்தத் ... மேலும் பார்க்க

தாயைத் தாக்கிய மகள் தூக்கிட்டு தற்கொலை

திருத்தணி அருகே தாயைத் தாக்கிய வேதனையில் மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருத்தணி அடுத்த கீழாந்துாா் கிராமத்தைச் சோ்ந்தவா் லதா(50). இவருக்கு பிரகாசம்(25) என்ற மகனும், பிரியா(23) என்ற மகள... மேலும் பார்க்க

அகத்தீஸ்வரா் கோயிலில் பிரதோஷம்

பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அகத்தீஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பொன்னேரி கும்மமுனிமங்கலம் பகுதியில் உள்ள ஆரணி ஆற்றங்கரை... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு

வீரகநல்லூா் மோட்டூா் கிராமத்தில் மூதாட்டியிடம் 5 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். திருத்தணி ஒன்றியம், வீரகநல்லூா் மோட்டூா் கிராமத்தைச் சோ்ந்த முனிரத்தினம் மனைவி ர... மேலும் பார்க்க