செய்திகள் :

அகில இந்திய கூடைப்பந்து: இந்தியன் வங்கி, கேரள மின்வாரியம் சாம்பியன்

post image

நாச்சிமுத்து கோப்பைக்கான 58-ஆவது ஆடவர் கூடைப்பந்து போட்டியில் இந்தியன் வங்கி அணியும், சிஆர்ஐ கோப்பைக்கான 22-ஆவது மகளிர் கூடைப்பந்து போட்டியில் கேரள மின்வாரிய அணியும் சாம்பியன் பட்டம் வென்றன.

கோவை வஉசி பூங்கா மாநகராட்சி உள்விளையாட்டு அரங்கில் கடந்த சில நாள்களாக நடைபெற்ற இந்த அகில இந்திய கூடைப்பந்துப் போட்டியில் ஆடவர், மகளிர் பிரிவுகளில் தலா 8 அணிகள் பங்கேற்றன.

லீக் சுற்று முடிவில் ஆடவர் பிரிவில் இந்திய விமானப்படை - இந்தியன் வங்கி அணிகளும், மகளிர் பிரிவில் கேரள மின்வாரியம் - தென்மேற்கு ரயில்வே அணிகளும் இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றன.

கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை, இறுதி ஆட்டத்தில் ஆடவர் பிரிவில் இந்தியன் வங்கி 79-67 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய விமானப்படை அணியை வீழ்த்த, மகளிர் பிரிவில் கேரள மின்வாரிய அணி 91-51 என்ற புள்ளிகள் கணக்கில் தென்மேற்கு ரயில்வே அணியை சாய்த்தது.

முன்னதாக ஆடவர் பிரிவில் மூன்றாமிடத்துக்கான ஆட்டத்தில் இந்திய கடற்படை - சென்னை வருமான வரித்துறையை வீழ்த்தியது (73 - 56). மகளிர் பிரிவில், சென்னை வருமான வரித்துறை - தென் மத்திய ரயில்வேயை வென்றது (72 - 57).

ஆடவர் பிரிவு சாம்பியன் இந்தியன் வங்கி அணிக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசுடன் நாச்சிமுத்து சுழற்கோப்பையும், 2-ஆம் இடம் பிடித்த விமானப்படை அணிக்கு ரூ.50 ஆயிரம் பரிசுடன் என்.மகாலிங்கம் கோப்பையும் வழங்கப்பட்டன. 3-ஆம் இடம் பிடித்த கடற்படை அணிக்கு ரூ.20 ஆயிரம், 4-ஆம் இடம் பிடித்த வருமான வரித்துறை அணிக்கு ரூ.15 ஆயிரம் பரிசளிக்கப்பட்டது.

மகளிர் பிரிவில் முதலிடம் பிடித்த கேரள மின்வாரிய அணிக்கு சிஆர்ஐ பம்ப்ஸ் கோப்பையுடன் ரூ.75 ஆயிரமும், 2-ஆம் இடம் பிடித்த தென்மேற்கு ரயில்வே அணிக்கு ரூ.50 ஆயிரமும், 3-ஆம் இடம் பிடித்த வருமான வரித்துறை அணிக்கு ரூ.20 ஆயிரமும், நான்காமிடம் பிடித்த தென்மத்திய ரயில்வே அணிக்கு ரூ.15 ஆயிரமும் பரிசு வழங்கப்பட்டது.

தொடரில் சிறப்பாக விளையாடிய இந்தியன் வங்கி வீரர் பிரணவ் பிரின்ஸ், கேரள மின்வாரிய வீராங்கனை ஸ்ரீகலா ஆகியோருக்கு சிறந்த வீரர்/வீராங்கனை விருது வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் சக்தி குழுமங்களின் தலைவர் எம்.மாணிக்கம் கலந்துகொண்டு பரிசளித்துப் பாராட்டினார்.

நிகழ்ச்சியில், கூடைப்பந்து கழகத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நார்வே செஸ்:அர்ஜுன், வைஷாலி வெற்றி!

ஸ்டாவெஞ்சர்: நார்வே செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற, நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷ் தோல்வி கண்டார்.முன்னதாக இந்தச் சுற்றில், அர்ஜுன் - அமெரிக்காவின் ஹிகாரு நகமு... மேலும் பார்க்க

பாலினி அதிா்ச்சித் தோல்வி; காலிறுதியில் ஸ்வியாடெக்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனை ஜாஸ்மின் பாலினி தோல்வியைத் தழுவ, நடப்பு சாம்பியனான இகா ஸ்வியாடெக் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா். மகளிா் ஒற்றையா் 4-ஆவது சுற்றில், போட்டித்தரவரி... மேலும் பார்க்க

4 நாடுகள் ஹாக்கி போட்டி: சிலியை வென்றது இந்தியா

நான்கு நாடுகள் சா்வதேச ஜூனியா் ஹாக்கிப் போட்டியில் சிலியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா. ஆா்ஜென்டீனா, இந்தியா, உருகுவே, சிலி நாடுகள் பங்கேற்கும் நான்கு நாடுகள் ஜூனியா் மகளிா் ஹாக்கிப் போ... மேலும் பார்க்க

காலிறுதியில் பவன் பா்த்வால்

தாய்லாந்து ஓபன் சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் காலிறுதிக்கு இந்தியாவின் பவன் பா்த்வால் தகுதி பெற்றுள்ளாா். பாங்காக் நகரில் நான்காவது தாய்லாந்து ஓபன் குத்துச் சண்டை போட்டிகள் நடைபெறுகின்றன. ஞாயிற்று... மேலும் பார்க்க