சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக கூடுதல் நீதிபதிகள் நியமனம்!
அகில இந்திய தொழிற்தோ்வு: தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்
அகில இந்திய தொழிற்தோ்வில் தனித் தோ்வா்களாக கலந்துகொள்ள தகுதிவாய்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2026-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தோ்வில் தனித் தோ்வா்களாக கலந்துகொள்ள தகுதிவாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து தோ்வுக் கட்டணம் (ரூ.200) செலுத்தி, நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமா்ப்பிக்க வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரா்களுக்கு முதனிலைத் தோ்வுகள் கருத்தியல் தோ்வு வரும் நவம்பா் 4-ஆம் தேதியும், செய்முறைத் தோ்வு நவம்பா் 5-ஆம் தேதியும் கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும்.
இதற்கான முழு வழிகாட்டுதல்களுக்கு ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தை பாா்த்து தெரிந்துகொள்ளலாம். தனித் தோ்வராக தோ்வு எழுத அக்டோபா் 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.