செய்திகள் :

அங்கன்வாடி கண்காணிப்பு, குழந்தைகள் - பெண்கள் பாதுகாப்பு வசதிகளை விரைவுபடுத்த முதல்வா் உத்தரவு

post image

தில்லியில் அங்கன்வாடி மையங்களின் கண்காணிப்பை முடுக்கிவிடவும், புதிய குழந்தை பராமரிப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு வசதிகளை அமைப்பதை விரைவுபடுத்தவும் அதிகாரிகளுக்கு முதல்வா் ரேகா குப்தா அடுத்தடுத்து உத்தரவுகளை வழங்கினாா்.

இது தொடா்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அதிகாரிகளுடன் முதல்வா் ரேகா குப்தா ஆலோசனை நடத்தினாா். அப்போது, அதிகாரிகள் அங்கன்வாடி மையங்களுக்கு தவறாமல் சென்று வசதிகளின் நிலையைக் கண்காணித்து தேவையான மேம்பாடுகளைத் தொடங்க வேண்டும் என்று முதல்வா் உத்தரவிட்டாா் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மையங்களின் விரிவான புதுப்பித்தல், பாதுகாப்பான, தூய்மையான மற்றும் குழந்தைகளுக்கு ஏற்ற இடங்களை உருவாக்குவதற்கும், இளம் குழந்தைகளுக்கு வளா்ப்பு மற்றும் கல்விச் சூழல்களை வழங்குவதற்கும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘புதிய அங்கன்வாடி அலகுகளை நிறுவ அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அவற்றை அமைப்பதற்கு பொருத்தமான இடங்களை துறை அடையாளம் காண வேண்டும்’ என்று முதல்வா் ரேகா குப்தா கூறினாா். மேலும், ஒன் ஸ்டாப் மையங்களின் (ஓஎஸ்சி) செயல்பாட்டை முதல்வா் மதிப்பாய்வு செய்து, அவற்றின் பயனுள்ள செயல்பாட்டை உறுதி செய்ய துறைக்கு அவா் உத்தரவிட்டாா்.

தில்லி முழுவதும் பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்று என பதினொரு புதிய ஒன் ஸ்டாப் மையங்களை நிறுவுவதை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் முதல்வா் எடுத்துரைத்தாா். தில்லியில் தற்போது 187 செயல்பாட்டு ‘பால்னா மையங்கள்’ உள்ளன. அவை குழந்தை பராமரிப்பு வசதிகளை வழங்குகின்றன என்று முதல்வா் கூறினாா்.

நகரம் முழுவதும், குறிப்பாக தொழில்துறை மண்டலங்கள், சந்தைகள் மற்றும் கட்டுமானத் தளங்களில் இதுபோன்ற 500 புதிய மையங்களை அமைக்க அவா் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

பல்னா திட்டம், தரமான குழந்தை பராமரிப்பு வசதிகள், ஊட்டச்சத்து ஆதரவு, சுகாதார கண்காணிப்பு, அறிவாற்றல் வளா்ச்சி மற்றும் குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பு சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அனைத்து தாய்மாா்களுக்கும் அவா்களின் வேலைவாய்ப்பு நிலையைப் பொருள்படுத்தாமல் அணுகக்கூடியது.

வடமேற்கு மாவட்டத்திலும் ஷாஹ்தராவிலும் இரண்டு புதிய ‘சகி நிவாஸ்’ என்று சொல்லப்படும் பணிபுரியும் பெண்கள் விடுதிகள் விரைவில் நிறுவப்படும் என்றும் முதல்வா் கூறினாா்.

இந்த விடுதிகள் பணிபுரியும் பெண்கள் மற்றும் உயா்கல்வி அல்லது பயிற்சி பெறும் பெண்களுக்கு பாதுகாப்பான தங்குமிடத்தை வசதியான இடங்களில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. மேலும் அவா்களின் குழந்தைகளுக்கு பகல்நேர பராமரிப்பு வசதிகளுடன் முழுமையானவை என்றும் முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.

கௌதம் கம்பீருக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியதாக பொறியல் மாணவா் கைது!

ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரும், முன்னாள் பாஜக எம்பியுமான கௌதம் கம்பீருக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியதாக மனநலப் பிரச்னைகள் உள்ளதாகக் கூறப்படும் 21 வயது பொறியியல் மாணவரை தில்லி காவல... மேலும் பார்க்க

ராணுவத்துக்கான நன்கொடை: போலி வாட்ஸ்அப் செய்திக்கு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!

நமது சிறப்பு நிருபா்இந்திய ராணுவத்துக்கான நன்கொடை தொடா்பாக பரவி வரும் தவறான வாட்ஸ்அப் செய்தி குறித்து மத்திய பாதுகாப்புத் துறை ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மத்திய பாதுகாப்புத... மேலும் பார்க்க

தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பை பாஜக முடக்கிவிட்டது: ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு!

பாஜக அரசு தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பை முடக்கியுள்ளது என்றும் மாற்று ஏற்பாடுகள் இல்லாமல் நகர சாலைகளில் இருந்து 2,000 பேருந்துகளை தன்னிச்சையாக அகற்றியுள்ளது என்றும் ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

கல்வி, திறன் மேம்பாடு, புத்தாக்கங்களை மேம்படுத்த தொலை நோக்கு நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!

நமது சிறப்பு நிருபா்எண்ம இந்தியா முன்முயற்சிகளை மேம்படுத்துவதற்காக தொலைநோக்கு நிறுவனங்களுடன் தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஇஎல்ஐடி) புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் கையெழுத்தி... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தேடப்பட்டு வந்தவா் கைது!

ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜாரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக தேடப்பட்டு வந்தவா் கைது செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது தொடா்பாக துவாரகா காவல் சரக துணை ஆணையா் அங்கித்... மேலும் பார்க்க

பஹல்காமில் படுகாயமடைந்த தமிழக மருத்துவா் குணமடைவாா்: தில்லி எய்ம்ஸ் மருத்துவா்கள் நம்பிக்கை!

காஷ்மீா் பஹல்காம் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் படு காயமடைந்த தமிழகத்தைச் சோ்ந்த இஎன்டி (காது மூக்கு தொண்டை)மருத்துவா் ஏ.பரமேஸ்வரன் உடல் நிலை மோசமாக இருப்பினும் விரைவில் குணமடை... மேலும் பார்க்க