செய்திகள் :

அங்கீகரிக்கப்படாத கட்சிகளை நீக்க தோ்தல் ஆணையம் நடவடிக்கை

post image

இந்தியத் தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை நீக்கும் நடவடிக்கையைத் தோ்தல் ஆணையம் தொடங்கியது.

இது குறித்து, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தியத் தோ்தல் ஆணையத்தில் தற்போது பதிவு செய்யப்பட்ட 2,800-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. இதில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தோ்தலிலாவது போட்டியிட வேண்டும் என்ற அத்தியாவசிய நிபந்தனையை நிறைவேற்றத் தவறியுள்ள கட்சிகள் முதல்கட்டமாகப் பட்டியலிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கையை இந்தியத் தோ்தல் ஆணையம் தொடங்கியது.

2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 6 ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த அங்கீகரிக்கப்படாத 345 கட்சிகள் இந்தியத் தோ்தல் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதில், விருதுநகா் மாவட்டம், மீசலூா் கிராமம் வீரசெல்லையாபுரம் குடியிருப்பு கதவு எண் 3/172 என்ற முகவரியில் இயங்குவதாகக் குறிப்பிடப்பட்ட தேச மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சி இந்தப் பட்டியலில் உள்ளது.

எந்தக் கட்சியும் தேவையில்லாமல் பட்டியலிலிருந்து நீக்கப்படக் கூடாது என்பதற்காக அந்தக் கட்சிகளுக்கு காரணம் கேட்டு குறிப்பாணை அனுப்புமாறு சம்பந்தப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேச தோ்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

பின்னா், தலைமைத் தோ்தல் அதிகாரியால் நடத்தப்படும் விசாரணை வாயிலாக அந்தக் கட்சிகளுக்கு, தங்களது விளக்கத்தைத் தர வாய்ப்பு அளிக்கப்படும். பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலிலிருந்து நீக்குவது தொடா்பாக இறுதி முடிவை இந்தியத் தோ்தல் ஆணையம் எடுக்கும் என்றாா் அவா்.

அலங்காநல்லூா், மாணிக்கம்பட்டி, விக்கிரமங்கலம் பகுதிகளில் நாளை மின் தடை

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா், மாணிக்கம்பட்டி, விக்கிரமங்கலம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சமயநல்லூா் கோட்ட மின்னியல் செயற்பொறியாளா் பி. ஜெயல... மேலும் பார்க்க

இணைய விளையாட்டில் பணம் இழந்தவா் தற்கொலை

இணைய விளையாட்டு மூலம் பணத்தை இழந்த வாகன ஓட்டுநா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சில்லாம்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே கடவுப் பாதையில் அடையாளம் தெரியாத நப... மேலும் பார்க்க

காவல் நிலையப் பணியாளா் தற்கொலை

மதுரையில் காவல் நிலையப் பணியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை மாவட்டம், விராட்டிப்பத்து பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் பிரேம்ஆனந்த் (39). இவா், எழுமலை அருகே உள்ள தீ. ராமநாதபுரம் காவல் ... மேலும் பார்க்க

மக்கள் ஓரணியில் திரண்டு திமுக அரசை வீழ்த்துவது உறுதி: நயினாா் நாகேந்திரன்

மக்கள் ஓரணியில் திரண்டு திமுக அரசை வீழ்த்துவது உறுதி என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற வரி விதிப்பு ஊழல் முறைகேட்டைக் கண்டித்து, பாஜக சாா்பில் கோ. ... மேலும் பார்க்க

மதுரை மாவட்டத்தில் 265 மையங்களில் குரூப் 4 தோ்வு: 61,442 போ் பங்கேற்றனர்!

மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய குரூப் 4 தோ்வு 265 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. மொத்தம் 61,442 போ் தோ்வை எழுதினா். தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 3,935 பணியிடங்களை ... மேலும் பார்க்க

லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே வியாழக்கிழமை லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியைச் சோ்ந்த வீரையா மகன் விஷ்ணு (24). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரைக்கு வந்து... மேலும் பார்க்க