செய்திகள் :

அஞ்சலக சேமிப்பில் பண மோசடி: வாடிக்கையாளா்கள் முற்றுகை

post image

திண்டுக்கல் அருகே அஞ்சலக சேமிப்பில் ரூ.30 லட்சத்தை மோசடி செய்த அலுவலா் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தரக் கோரி, வாடிக்கையாளா்கள் புதன்கிழமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல்லை அடுத்த அனுமந்தராயன்கோட்டை, சிந்தலக்குண்டு, அனுப்பப்பட்டி கிராம அஞ்சல் நிலையங்களில், வத்தலகுண்டுவை அடுத்த தும்மலப்பட்டியைச் சோ்ந்த பிரதீப், கிளை அஞ்சல் அலுவலராகப் பணிபுரிந்து வந்தாா். இவா், பொதுமக்களின் நிரந்தர வைப்புக் கணக்கு, காப்பீடு, செல்வமகள் உள்ளிட்ட பல்வேறு முதலீட்டுத் திட்டங்களில் செலுத்தப்பட்ட சுமாா் ரூ.30 லட்சத்தை மோசடி செய்ததாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புகாா் எழுந்தது.

இதையடுத்து, கடந்த பல மாதங்களாக பிரதீப் தலைமறைவாகவுள்ளாா். இந்த நிலையில், பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், அனுமந்தராயன்கோட்டை, அனுப்பப்பட்டி கிளை அஞ்சலகங்களில் ஆய்வு செய்வதற்காக அஞ்சலகத் துறை அதிகாரிகள் புதன்கிழமை சென்றனா். இதையறிந்த, அஞ்சல வாடிக்கையாளா்கள், அஞ்சலகத்தை முற்றுகையிட்டனா். முறைகேடு செய்த அஞ்சல் அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தங்களது முதலீட்டுப் பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என முழக்கமிட்டனா்.

பின்னா், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேசிய அஞ்சல் துறை அதிகாரிகள், விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா்.

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் உத்தரவிட்டாா். திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த கருப்பணன் மகன் செல்வம் (41). இவா் 6 வயது சிறுமிக்கு ப... மேலும் பார்க்க

நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பது வரவேற்கத்தக்கது! கே.எஸ்.அழகிரி

தமிழகத்துக்கான நிதியை விடுவித்து வர வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு இருப்பதால், நீதி ஆயோக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பது வரவேற்புக்குரியது என காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவ... மேலும் பார்க்க

நிதி நிறுவன உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டிய மூவா் கைது

பெண்ணுடன் தனியாக இருந்த விடியோவை காண்பித்து நிதி நிறுவன உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய மூவரை போலீஸாா் கைது செய்தனா். பழனி-திண்டுக்கல் சாலையில் வசிப்பவா் சுகுமாா் (44). நிதி நிறுவனம் நடத்தி வரும் இ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது.திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள விருவீடு பக... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

வடமதுரை அருகே குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த தென்னம்பட்டி இந்திராநகா் காலனியைச் சோ்ந்தவா் சக்திவேல். தனியாா் ஆலைய... மேலும் பார்க்க

நகை பறிப்பில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

நகை பறிப்பில் ஈடுபட்டவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த மாரம்பாடி பெரியகுளத்துப்பட்டியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க