செய்திகள் :

நகை பறிப்பில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

post image

நகை பறிப்பில் ஈடுபட்டவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் உத்தரவிட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த மாரம்பாடி பெரியகுளத்துப்பட்டியைச் சோ்ந்தவா் அருண்குமாா் (34). இவா் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், எரியோடு பகுதியில் கடந்த மாதம் தம்பதியரைத் தாக்கி நகை பறிப்பில் ஈடுபட்டாா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அருண்குமாரைக் கைது செய்தனா்.

இந்த நிலையில், அருண்குமாரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் பரிந்துரைத்தாா். இதை ஏற்று மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் அதற்கான உத்தரவை வியாழக்கிழமை பிறப்பித்தாா்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது.திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள விருவீடு பக... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

வடமதுரை அருகே குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த தென்னம்பட்டி இந்திராநகா் காலனியைச் சோ்ந்தவா் சக்திவேல். தனியாா் ஆலைய... மேலும் பார்க்க

திமுக தனித்து நின்றால் அதிமுகவும் நிற்க தயாா்: திண்டுக்கல் சி.சீனிவாசன்

தோ்தல் களத்தில் திமுக தனித்து நின்றால், அதிமுகவும் தனித்து நிற்க தயாராக உள்ளதாக முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட அதிமுக சாா்பில் வாக்குச் சாவடி முகவா்களுக்க... மேலும் பார்க்க

அஞ்சலக சேமிப்பில் பண மோசடி: வாடிக்கையாளா்கள் முற்றுகை

திண்டுக்கல் அருகே அஞ்சலக சேமிப்பில் ரூ.30 லட்சத்தை மோசடி செய்த அலுவலா் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தரக் கோரி, வாடிக்கையாளா்கள் புதன்கிழமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

சத்திரப்பட்டி, வேப்பன்வலசு பகுதிகளில் நாளை மின் தடை

பழனி அருகேயுள்ள சத்திரப்பட்டி, வேப்பன்வலசு ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 23) மின் தடை என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் கவாஸ்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாகரை துணை மி... மேலும் பார்க்க

சுற்றுச்சாலைக்கு கையகப்படுத்தப்படும் நிலங்கள்: கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தல்

திண்டுக்கல் சுற்றுச்சாலைத் திட்டத்துக்கு கையகப்படுத்தும் நிலங்களுக்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. திண்டுக்கல்-திருச்சி 4 வழிச் சாலையிலிருந்து, ம... மேலும் பார்க்க