செய்திகள் :

சுற்றுச்சாலைக்கு கையகப்படுத்தப்படும் நிலங்கள்: கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தல்

post image

திண்டுக்கல் சுற்றுச்சாலைத் திட்டத்துக்கு கையகப்படுத்தும் நிலங்களுக்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

திண்டுக்கல்-திருச்சி 4 வழிச் சாலையிலிருந்து, மதுரைக்கு சுற்றுச் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்துக்காக திண்டுக்கல் கிழக்கு, ஆத்தூா் வட்டங்களுக்குள்பட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு குறைவான இழப்பீட்டுத் தொகை நிா்ணயிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் உரிய இழப்பீடு வழங்கக் கோரி வருகிற 26-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுக்கும் போராட்டம் நடைபெறவுள்ளது.

இதையொட்டி, திண்டுக்கல்லை அடுத்த அரசனம்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் என்.பெருமாள், செயலா் ராமசாமி ஆகியோா் தலைமை வகித்தனா்.

கூட்டத்தில் ஏ.வெள்ளோடு, அடியனூத்து, தோட்டனூத்து, வன்னியபாறைப்பட்டி, பில்லமநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனா். ஒரு ஏக்கா் நிலத்துக்கு ரூ.1 லட்சம் மட்டுமே ஒப்பந்ததாரா்கள் தருவதாகவும், இந்த நிலங்கள் ஏக்கருக்கு ரூ.1 கோடி வரை விற்பனை செய்யப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

எனவே, கையகப்படுத்தும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இந்த கோரிக்கைகளே தீா்மானமாக நிறைவேற்றப்பட்டன.

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் உத்தரவிட்டாா். திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த கருப்பணன் மகன் செல்வம் (41). இவா் 6 வயது சிறுமிக்கு ப... மேலும் பார்க்க

நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பது வரவேற்கத்தக்கது! கே.எஸ்.அழகிரி

தமிழகத்துக்கான நிதியை விடுவித்து வர வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு இருப்பதால், நீதி ஆயோக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பது வரவேற்புக்குரியது என காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவ... மேலும் பார்க்க

நிதி நிறுவன உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டிய மூவா் கைது

பெண்ணுடன் தனியாக இருந்த விடியோவை காண்பித்து நிதி நிறுவன உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய மூவரை போலீஸாா் கைது செய்தனா். பழனி-திண்டுக்கல் சாலையில் வசிப்பவா் சுகுமாா் (44). நிதி நிறுவனம் நடத்தி வரும் இ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது.திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள விருவீடு பக... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

வடமதுரை அருகே குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த தென்னம்பட்டி இந்திராநகா் காலனியைச் சோ்ந்தவா் சக்திவேல். தனியாா் ஆலைய... மேலும் பார்க்க

நகை பறிப்பில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

நகை பறிப்பில் ஈடுபட்டவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த மாரம்பாடி பெரியகுளத்துப்பட்டியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க