செய்திகள் :

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 15 மாவட்டங்களில் மழை!

post image

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்று(ஜூன் 10) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (மாலை 5.40 மணி வரை) திருவண்ணாமலை, கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: எம்.பி. ஆகிறார் கமல்! 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!

மக்களிடம் நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில் தெரிய வந்த உண்மை.. மா. சுப்பிரமணியன்

கடந்த 2020 ஆம் ஆண்டு 32 % நோய் எதிர்ப்பு சக்தி என்ற அளவில் மக்களிடம் இருந்தது. இது, கடந்த 2021 ஆம் ஆண்டு 29 % என்ற அளவில் குறைந்து காணப்பட்டது.ஆனால் தற்போது அது 97 % என்ற அளவில் மக்களிடையே நோய் எதிர்ப... மேலும் பார்க்க

தேமுதிக தனித்துப் போட்டியா? பிரேமலதா பதில்!

எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட தயங்காது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சித் தலைமை அலுவ... மேலும் பார்க்க

2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு!

3 ஆண்டுகளுக்கு மேல் காலியாகவுள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு கிராம உதவியாளர் பணிக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இப்பணியிடங்களை விரை... மேலும் பார்க்க

நீர்நிலை ஆக்கிரமிப்புகள்: அரசு அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

சென்னை: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், அரசு அதிகாரிகள் முறையாக செயல்படுவதில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.நீர்நிலைகளை ஆக்ரமித்துக் கட்டப்படும் கட்டடங்களை அகற்றா... மேலும் பார்க்க

ராமேசுவரம் கோயிலில் உள்ளூா் மக்கள் தரிசனத்துக்கு கட்டணம்: இபிஎஸ் கண்டனம்

சென்னை: ராமேசுவரம் கோயிலில் உள்ளூா் மக்கள் சுவாமி தரிசனம் செய்ய கட்டணம் விதிக்கப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்... மேலும் பார்க்க

மலிவான அரசியலுக்காக வரலாறு காத்திருக்காது: அமைச்சா் தங்கம் தென்னரசு

சென்னை: மலிவான அரசியலுக்காக வரலாறு காத்திருக்காது என்று தமிழக நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளாா். கீழடி அகழாய்வு குறித்து மத்திய அமைச்சா் ஷெகாவத் கருத்துக்கு, ‘எக்ஸ்... மேலும் பார்க்க