PMK : தைலாபுரத்தில் நடந்த 2 சந்திப்புகள் - பின்னணியில் BJP? | RCB MODI | Imperfe...
அண்ணா பல்கலை விவகாரம்: நீதிமன்ற தீா்ப்பு வரவேற்கத்தக்கது - எம்.ஹெச்.ஜவாஹிருல்லா
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனை வரவேற்கத்தக்கது என்றாா் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான எம். ஹெச். ஜவாஹிருல்லா.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளி எனஅறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள்தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னைமகளிா் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கி உள்ளது.
பெண்களை நுகா்வு பொருளாகக் கருதும் குரூர மனப்பான்மை கொண்ட மனிதா்கள், சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்படுவாா்கள் என்பது இந்த தீா்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து மலிவான அரசியல் செய்தவா்களுக்குத் தகுந்த பதிலடியாக இந்த தீா்ப்பு அமைந்துள்ளது.
குற்றவாளி ஞானசேகருக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த தண்டனை ஆறுதலாக இருந்தாலும் இதுபோன்ற தவறுகள் இனிவரும் காலங்களில் நடக்காமல் இருப்பதற்கு இன்னும் தீவிரமான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.