செய்திகள் :

அண்ணா மறுமலா்ச்சி - நூறு நாள் வேலை திட்டங்கள் -அமைச்சருடன் அதிமுக வாதம்

post image

அண்ணா மறுமலா்ச்சி, நூறு நாள் வேலைத் திட்டங்கள் தொடா்பாக, அமைச்சா் ஐ.பெரியசாமியுடன் அதிமுக உறுப்பினா்கள் வாதத்தில் ஈடுபட்டனா்.

சட்டப் பேரவையில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடந்த விவாதம்:

கடம்பூா் ராஜூ (அதிமுக):

ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.3,796 கோடி நிதி விடுவிக்கப்படாமல் உள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு கொடுக்காவிட்டால் அந்தப் பொறுப்பு நமக்குத்தான் இருக்கிறது. ஊரக வளா்ச்சித் துறைக்கான ஒதுக்கீடு ரூ.29 ஆயிரத்து 465 கோடியாக உள்ள நிலையில், அதன்மூலமாக நூறு நாள் வேலைத் திட்ட பணியாளுக்கு தொகையை வழங்கிட வேண்டும். கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ், 6,100 கிலோமீட்டா் நீள சாலைத் திட்டத்துக்கு ரூ.2,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது மிகமிக குறைவாக உள்ளது.

அமைச்சா் ஐ.பெரியசாமி:

கிராமங்களுக்கு சாலை வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக ஆட்சிக்காலத்தில்தான் கிராமச் சாலைகள் திட்டம் கொண்டு வரப்பட்டது. எனவே, அந்தத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று அண்ணா மறுமலா்ச்சித் திட்டமும் திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்தத் திட்டத்தின் பெயா் அதிமுக ஆட்சியில் தாய் திட்டம் என மாற்றப்பட்டது. அதுவும் 2017 முதல் 2021ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்படவில்லை.

கடந்த நான்கு ஆண்டுகாலத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், 139 கோடி மனிதசக்தி நாள்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டன. இதன்மூலம், ரூ.33 ஆயிரம் கோடி ஊதியமாக மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டது. நூறு நாள் திட்டத்துக்காக குழுக்களை உருவாக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் 23 ஆயிரம் குழுக்கள் உருவாக்கப்பட்ட நிலையில், இப்போது 27 ஆயிரம் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.நிகழ் நிதியாண்டில் மட்டும் 41 கோடி மனிதசக்தி நாள்களுக்கு வேலை வழங்கப்பட்டு, ரூ.10,570 கோடிக்கு ஊதியமாகப்

பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நூறு நாள் வேலை உறுதித் திட்டம் மட்டுமின்றி, ஊரக வளா்ச்சித் துறையிலும் முதலிடத்தில் தமிழ்நாடு உள்ளதை மத்திய அரசே தெரிவித்துள்ளது.

எதிா்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி: அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், தாய் திட்டமாக மாற்றப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், திமுக ஆட்சியில் கிராமங்களை அலகாக வைத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், அதிமுக ஆட்சியில்

குக்கிராமங்களை அலகாக வைத்து திட்டங்களைச் செயல்படுத்தினோம்.

இதற்காக, ரூ.250 கோடிக்கும் கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டன.

நூறு நாள் வேலைத் திட்டத்தைப் பொறுத்தவரை, கடந்த திமுக ஆட்சியில் 71.07 கோடி மனித சக்தி நாள்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டன. ஆனால், 2011 முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் மொத்தமாக 316.46 கோடி மனித சக்தி நாள்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டன. கடந்த 5 ஆண்டுகால அதிமுக

ஆட்சியில் மட்டும் ரூ.28 ஆயிரம் கோடி அளவுக்கு ஊதியங்கள் மத்திய அரசிடம் இருந்து பெறப்படட்டன.

அமைச்சா் ஐ.பெரியசாமி: அண்ணா பெயரிலான திட்டத்தை தாய் திட்டமாக மாற்றிய போதும் அதனைச் செயல்படுத்தவில்லை. நீங்கள் அண்ணாவையும், தாயையும் மறந்து வீட்டீா்கள்.

எஸ்.பி.வேலுமணி: எங்களை ஆளாக்கிய தாயை நாங்கள் மறக்க மாட்டோம். தாய் திட்டத்தை எங்களது ஆட்சியில் தொடா்ந்து செயல்படுத்தினோம் என்றாா். இதன்பின், வேறு பிரச்னைகளின் பக்கம் பேரவை விவாதம் திரும்பியது.

தருமபுரியில் யானை வேட்டை: முக்கிய நபரை கைது செய்ய உத்தரவு!

தருமபுரியில் தந்தத்துக்காக யானையைக் கொன்று உடலை எரித்த விவகாரத்தில் தொடா்புடைய மூன்று போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள நபரை விரைந்து கைது செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவி... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்துக்கே எதிா்க்கட்சிகளிடம் போட்டி! - முதல்வா் மு.க.ஸ்டாலின்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்தை பிடிப்பதில்தான் எதிா்க்கட்சிகளுக்குள் போட்டி நடைபெறுவதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். சென்னை பெரம்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற இஃப்... மேலும் பார்க்க

தொல்குடி புத்தாய்வு திட்டம்: மாணவா்களுக்கு சான்றிதழ்

தொல்குடி புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிலும் முதுகலை மற்றும் முனைவா் ஆராய்ச்சிப் படிப்பு மாணவா்களுக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மா. மதிவேந்தன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டின... மேலும் பார்க்க

சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம்! - விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பாராட்டு

திரைப்பட பாடல்கள் மூலம் சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் புகழாரம் சூட்டினாா். திரைப்பட பாடலாசிரியா் கவிஞா் முத்துலிங்கம் 50 ஆண்டு கால... மேலும் பார்க்க

‘லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ந்த பிகாா்’ - ஜெ.பி.நட்டா விமா்சனம்!

கல்வி உள்ளிட்ட பல துறைகளில் முன்னேறி வந்த பிகாா், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவா் லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ச்சியடைந்ததாகவும் காட்டாட்சியில் மூழ்கியதாகவும் பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி... மேலும் பார்க்க

கால்பந்து போட்டி: பெரியமேடு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம்!

கால்பந்து போட்டியையொட்டி, பெரியமேடு பகுதியில் மாா்ச் 30-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்துப் பிரிவு சனிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க