செய்திகள் :

அதானிதான் மோடியை இயக்குகிறார்! ஏழை மக்களின் வளங்களைத் திருடுவதே அவர்களின் இலக்கு! - ராகுல் பேச்சு

post image

அதானிதான் நரேந்திர மோடியை இயக்குகிறார் என ஒடிசாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி மத்திய பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

"ஒடிசா, சத்தீஸ்கரில் ஒலிக்கும் ஒரே பெயர் அதானிதான். ஒடிசாவைப் பொருத்தவரை அதானிதான் ஒடிசா அரசை இயக்குகிறார். அதானிதான் நரேந்திர மோடியையே இயக்குகிறார். புரி ஜெகந்நாதா் ரத யாத்திரையில் பல லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். அன்று யாத்திரை நடைபெறும்போது அதானி மற்றும் அவரது குடும்பத்திற்காக தேர் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாகவே ஒடிசா அரசு எப்படி செயல்படுகிறது என்று தெரிந்துகொள்ளலாம். அதானி போன்ற 5- 6 பணக்காரர்களுக்காக இயங்கும் அரசு இந்த அரசு. உங்களுடைய நிலங்களை, காடுகளை மற்றும் எதிர்காலத்தைத் திருடுவதே அவர்களின் இலக்கு.

நான் ஒன்று கேட்கிறேன், இந்த அரசு எத்தனை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது? பெரிய பெரிய நிறுவனங்கள் வருகின்றன. ஆனால் உங்களில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது.

அவர்களின் உங்களின் நிலங்களை, பணத்தை, இயற்கை வளங்களை எடுத்துக்கொள்கிறார்கள்.

உங்களின் சிறு வியாபாரங்களை முதலில் அழித்து உங்களுடைய நிலங்களை, தண்ணீரை, காடுகளை எல்லாம் எடுத்துக்கொள்கிறார்கள்.

ஏழை மக்களிடம் இருந்து அனைத்தையும் திருடுவதே ஒடிசா பாஜக அரசின் ஒரே வேலை. முன்னதாக பிஜேடி அரசு இதைச் செய்தது. இப்போது பாஜக அரசு இதனைச் செய்கிறது.

ஒருபுறம் ஒடிசாவின் ஏழை மக்கள். தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், விவசாயிகள், தொழிலாளர்கள். மறுபுறம் 5- 6 பணக்காரர்களும் பாஜக அரசும்.

ஒடிசா மக்களுடன் இணைந்து வரும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும். அதை யாராலும் தடுக்க முடியாது" என்று பேசினார்.

While addressing a public gathering in Odisha's Bhubaneshwar, Rahul said that Adani runs Narendra Modi.

இதையும் படிக்க | பாஜகவின் ஒரு பிரிவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: ராகுல் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதளுக்கு அளித்த நேர்காணலில் அமை... மேலும் பார்க்க

இன்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? ஏர் இந்தியா விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக முதல்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சரண்: ரூ.37 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டவா்கள்

சத்தீஸ்கரின் நாராயண்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 22 நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தனா். இவா்கள் அனைவரும் ரூ.37.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா்கள் எ... மேலும் பார்க்க

‘இணைப்புகள் நொறுங்கியதே குஜராத் பால விபத்துக்கு காரணம்’: முதல்கட்ட விசாரணையில் தகவல்

குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்த விபத்துக்கு அதன் இணைப்புகள் நொறுங்கியதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாநில சுகாதாரத் துறை அமைச்சரும் அரசின் செய்தித் தொடா்பாளருமான ரிஷிகேஷ் படேல் இ... மேலும் பார்க்க

யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி உண்மையை வெளிக்கொண்டுவர தமிழ்க் கட்சி வலியுறுத்தல்

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் உடனான 2009-ஆம் ஆண்டு இறுதிப் போருடன் தொடா்புடையதாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி தொடா்பான உண்மையை வெளிக்கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந் ந... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: முன்னாள் தலைமை நீதிபதிகளுடன் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனை

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹா், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோா் வெள்ளிக்கிழமை தங்களின் ஆலோசனை... மேலும் பார்க்க