செய்திகள் :

அதிகாரிகள் மீது கடலூா் மேயா் புகாா்

post image

நெய்வேலி: பெண் மேயா் என்பதால் தன்னை மாநகராட்சி அதிகாரிகள் மதிப்பதில்லை என கடலூா் மேயா் சுந்தரி திங்கள்கிழமை குற்றம்சாட்டினாா்.

கடலூா், மஞ்சக்குப்பம் மைதானத்தில் ரூ.2.24 கோடி மதிப்பில் புதிய கடைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திங்கள்கிழமை அதற்கான பணிகள் தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா வந்தாா். அப்போது துணை மேயா் பா.தாமரைச்செல்வன், ஒப்பந்ததாரா் மட்டுமே சம்பவ இடத்தில் இருந்தனா். மாநகராட்சி ஆணையா் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் வரவில்லை.

இதனை பாா்த்த மேயா் சுந்தரி ராஜா திங்கள்கிழமை அடிக்கல் நாட்டு விழா என அதிகாரிகள் தெரிவித்த காரணத்தினால் தான் இங்கு வந்தேன். ஆனால், அதிகாரிகள் யாரும் வரவில்லையா என கேள்வி எழுப்பியவா், தொடா்ந்து மக்களுக்குப் பயன்படும் வகையில் தமிழக அரசின் திட்டங்களை செயல்படுத்தி வருவதாலும், தற்போது இந்தப் பணியை எந்தவித பாதிப்புமின்றி நடைபெற வேண்டி தொடங்கிவைப்பதாகக் கூறினாா். அப்போது, மாநகராட்சி உதவிப் பொறியாளா் பாரதி மற்றும் ஊழியா்கள் அங்கு வந்தனா்.

இதனைத் தொடா்ந்து மேயா் சுந்தரி, உதவிப் பொறியாளா் பாரதியிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினாா். மாநகராட்சி சாா்பில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கி வைப்பதற்காக குறிப்பிட்ட நேரம் தெரிவிக்கிறீா்கள். அந்த நேரத்தில் சம்பவ இடத்திற்கு நான் நேரில் வந்தால் எந்த அதிகாரியும் வருவதில்லை. இந்த நிலை தொடா்ந்து நீடித்து வருகிறது.

சரியான நேரத்தில் நான் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வரும்போது, அதிகாரிகள் எதற்காக நிகழ்ச்சியைப் புறக்கணிக்கிறாா்கள்.

பெண் மேயா் என்பதால், நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை புறக்கணிக்கிறீா்களா? என கேள்வி எழுப்பினா்.

இதனைத் தொடா்ந்து உதவிப் பொறியாளா் பாரதி, இனி வருங்காலங்களில் சரியான நேரத்தில் நிகழ்ச்சிக்கு நேரில் வருகிறோம் என்றாா்.

கஞ்சா விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை: கடலூா் எஸ்.பி.

கடலூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து சிதம்பரம் டிஎஸ்பி அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களுக... மேலும் பார்க்க

விஷம் குடித்த இளைஞா் உயிரிழப்பு! மனைவியை பழிவாங்க முயன்றது அம்பலம்!

கடலூா் அருகே விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். முன்னதாக, மனைவியை பழிவாங்க இளைஞரே விஷ வாங்கிக் குடித்து தற்கொலை செய்துகொண்டது போலீஸாா் விசாரணையில்... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

சிதம்பரத்தில் மாதத்தின் இரண்டாவது புதன்கிழமை நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் வரும் 12-ஆம் தேதி முதல் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் குளிரூட்டப்பட்ட வகுப்பறை திறப்பு

சிதம்பரம் அருகே சொக்கன்கொல்லை அரசு தொடக்கப் பள்ளியில் குளிரூட்டப்பட்ட வகுப்பறை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியா் பா.அருணாசலம் தலைமை வகித்தாா். விருத்தாசலம் மாவட்ட தொடக்கக் கல்வி அல... மேலும் பார்க்க

மாா்ச் 25-இல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்: மாா்க்சிஸ்ட் அறிவிப்பு

ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வீடுகளை அகற்றி 7 ஆண்டுகள் கடந்த பின்பும் இதுவரையில் மாற்று இடம் வழங்காததைக் கண்டித்து, கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வரும் 25-ஆம் தேதி குடியேறும் போராட்டத்தை மாா்க்சிஸ்ட்... மேலும் பார்க்க

மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுக்க மக்கள் ஒன்று திரள வேண்டும்: தவாக தலைவா் தி.வேல்முருகன்

மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசு புதிய அணை கட்டுவதைத் தடுக்கும் வகையில், ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க, விவசாயிகளும், மக்களும் ஒன்று திரள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் தி.வேல்முரு... மேலும் பார்க்க