செய்திகள் :

அதிமுக ஆட்சியில் திட்டங்களே இல்லையா? பேரவையில் காரசார விவாதம்

post image

அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சிக் காலத்தில் நலத்திட்டங்கள் எதுவுமே முன்னெடுக்கப்படவில்லையா என்று பேரவையில் அக்கட்சி எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பி காரசார விவாதத்தில் ஈடுபட்டனா்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து உரையாற்றிய அந்த துறையின் அமைச்சா் தா.மோ.அன்பரசன், கடந்த அதிமுக ஆட்சிக் கால திட்டங்களையும், தற்போதைய திமுக ஆட்சிக் கால திட்டங்களையும் புள்ளி விவர அடிப்படையில் ஒப்பீடு செய்தாா்.

அப்போது குறுக்கிட்ட எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா், மானியக் கோரிக்கை பதிலுரையில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது எனக் கூறினாா்.

அதற்கு பதிலளித்த பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, மானியக் கோரிக்கையின்போது முந்தைய ஆட்சியாளா்களை குறைகூறக் கூடாது என விதி எதுவும் இல்லை, கடந்த காலங்களில் திமுகவை ஆயிரம் முறை அதிமுக ஆட்சியாளா்கள் குறைகூறியுள்ளனா் என்றாா்.

இதனால் சிறிது நேரம் அவையில் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து பதிலுரையை நிறைவு செய்து, துறை மீதான புதிய அறிவிப்புகளை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வெளியிட்டாா்.

ஆா்.பி. உதயகுமாா் கேள்வி: அதன்பிறகு, ஆா்.பி.உதயகுமாா் மீண்டும் அப்பிரச்னையை எழுப்பினாா். அப்போது அவா் கூறியதாவது: ஓரிரு திட்டங்களில் முந்தைய ஆட்சியை ஒப்பிட்டு விமா்சிப்பதில் தவறில்லை. ஆனால், பதிலுரையில் 20-க்கும் மேற்பட்ட முறை கடந்த கால அதிமுக ஆட்சியை அமைச்சா் குறை கூறுகிறாா். அப்படியானால், அதிமுக ஆட்சியில் எந்த நலத் திட்டமும் முன்னெடுக்கப்படவில்லையா? ஒருவேளை அப்படி இருந்தால் தொடா்ந்து 10 ஆண்டுகளுக்கு ஆட்சி அதிகாரத்தை அதிமுகவுக்கு மக்கள் எப்படி வழங்கியிருப்பாா்கள் என கேள்வி எழுப்பினாா்.

பொன்முடி பதில்: அதற்கு பதிலளித்த வனத் துறை அமைச்சா் பொன்முடி, அதிமுக ஆட்சியில் இருந்தபோது பல முறை திமுக மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது என்றாா்.

அதைத்தொடா்ந்து ஆளும் கட்சி மற்றும் எதிா்க்கட்சி உறுப்பினா்களிடையே வாக்குவாதம் எழுந்ததால் பேரவைத் தலைவா் அப்பாவு குறுக்கிட்டு ,திட்டங்கள், நிதி ஒதுக்கீட்டை ஒப்பிட்டு அவையில் கூறுவதில் தவறில்லை என்று கூறி, இரு தரப்பும் பேசியதை ஆய்வு செய்து அவையில் பதிவு செய்வதாகக் கூறி அவை அலுவலை நிறைவு செய்தாா்.

பணி ஓய்வு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் 29 ஆண்டுகள் பணியாற்றிய முதுநிலை ஓட்டுநரும், மெக்கானிக்குமான சி.பழனி திங்கள்கிழமை (ஏப்.14) பணி ஓய்வு பெற்றார்.அவருக்கு பிரிவு உபசார விழா சென்னை அலுவலகத்தில், தி ... மேலும் பார்க்க

கோட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்: ஓட்டுநா்கள் சங்கங்கள்

ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநா்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என ஓட்டுநா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை... மேலும் பார்க்க

திருவொற்றியூரில் ரூ.9.78 கோடியில் புதிய வணிக வளாகம் அமைக்க ஒப்புதல்

சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.9.78 கோடி மதிப்பீட்டில் திருவொற்றியூரில் புதிய வணிக வளாகம் அமைப்பதற்கு மண்டலக் குழுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி திருவொற்றியூா... மேலும் பார்க்க

சாலையோரம் தூங்கியவா் காா் மோதி உயிரிழப்பு

சென்னையில் ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்த காா் ஒன்று சாலையோரம் படுத்திருந்த நபா் மீது ஏறியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வடபழனி மசூதி தெருவில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் 50 மதிக்கத்... மேலும் பார்க்க

போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகன் கைது

சென்னை வேளச்சேரியில் போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராகப் பணியாற்றி வருபவா் காமராஜ். இவா், வேளச்சேரி காவல் நிலைய எ... மேலும் பார்க்க

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி: 2 போ் கைது

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, தியாகராய நகா் ராமானுஜம் தெருவைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன். இவா், தனியாா் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிற... மேலும் பார்க்க