செய்திகள் :

அதிமுக எம்பிக்களாக இன்பதுரை, தனபால் பதவியேற்பு

post image

மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுகவின் இன்பதுரை, தனபால் பதவியேற்றுக்கொண்டனர்.

அதிமுக எம்.பி.க்களுக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை எம்பிக்களாக பதவியேற்ற நிலையில் இன்று அதிமுகவினர் பதவியேற்றுள்ளனர்.

ஏற்கெனவே அதிமுகவின் தம்பிதுரை, சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் மாநிலங்களவை எம்.பிக்களாக உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், எம்.எம்.அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகியோரது பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, 6 இடங்களுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது.

தங்கம் விலை இன்றைய நிலவரம்!

திமுக, அதிமுக, ம.நீ.ம.வைச் சோ்ந்த 6 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனர். திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோரும், அதிமுக சாா்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

AIADMK Inbadurai and Dhanapal took oath as Rajya Sabha members.

ஆச்சரியம் ஆனால் உண்மை.. நாகப் பாம்பைக் கடித்த சிறுவன் உயிர்பிழைத்த அதிசயம்!

நாகப் பாம்பைக் கடித்து அதன் ஒருபகுதியை விழுங்கிய சிறுவன் உயிர்பிழைத்த அதிசயம் பிகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. சம்பாரண் மாவட்டத்தின் மோச்சி பங்கட்வா என்ற கிராமத்தில் கடந்த விழாயன்... மேலும் பார்க்க

நாய் பாபு, S/o, குட்டா பாபு! நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ்! பரபரப்பைக் கிளப்பும் பிகார்!

பிகாரில் நாய் பாபு என்ற பெயரில் ஒரு இருப்பிடச் சான்றிதழ், புகைப்படத்துடன், நாயின் பெற்றோர் பெயரும் சேர்க்கப்பட்டு டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்ட சான்றிதழ் வழஙகப்பட்டுள்ளது பிகாரில் பெரும் பரபரப்பைக்... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்திற்கு பிரதமர் வருவதில்லை; அமித் ஷா அரிதாகவே வருவார்: திருச்சி சிவா

நாட்டில் உள்ள முக்கிய பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார். பிகாரில் நிகழாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில... மேலும் பார்க்க

ராஜஸ்தான் பள்ளியில் கான்கிரீட் பெயர்ந்து விழுந்து சிறுவன் பலி!

ராஜஸ்தானில் உள்ள அரசுப் பள்ளியின் வாயிலில் கான்கிரீட் பெயர்ந்து விழுந்ததில் ஆறு வயது சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜலாவரில் அரசுப் பள்ளி கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததி... மேலும் பார்க்க

பெகாசஸ் வைத்திருக்கும் அரசு பயங்கரவாதிகளைப் பிடிக்காதது ஏன்? காங்கிரஸ் எம்பி

பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் எப்படி ஊடுருவினார்கள் என்று காங்கிரஸ் மக்களவை குழு துணைத் தலைவர் கௌரவ் கோகோய் கேள்வி எழுப்பியுள்ளார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் ச... மேலும் பார்க்க

காசி விஸ்வநாதர் கோயிலில் ஆக.11 முதல் பிளாஸ்டிக் தடை!

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் ஆகஸ்ட் 11 முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்து கோயில் நிர்வாகம் தடை விதித்து அறிவித்துள்ளது. கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிட்ட சுவரொட்டிகளில், காசி... மேலும் பார்க்க