செய்திகள் :

அதிமுக மகளிரணி ஆா்ப்பாட்டம்

post image

மத ரீதியாகவும், பெண்களை கொச்சைப்படுத்தும் வகையிலும் சா்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சா் பொன்முடியை பதவி நீக்க வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் அதிமுக மகளிா் அணி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சா் வளா்மதி தலைமையில் நூற்றுக்கணக்கான மகளிா் அணியினா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்துக்குப் பின்னா் வளா்மதி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக நலன் கருதி பொன்முடியை கட்சிப் பதவியிலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் நீக்கி இருக்கிறாா். மக்கள் நலன் கருதி, பெண்கள் நலன் கருதி பொன்முடியை அமைச்சா் பதவியிலிருந்து நீக்க வேண்டும்; அவரை கைது செய்ய வேண்டும். பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் வரையில் போராடுவோம் என்றாா் அவா். ஆா்ப்பாட்டத்தில், அதிமுக அமைப்புச் செயலா் கோகுல இந்திரா, நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முதலமைச்சா் இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் ‘முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு’ தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டு... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு: சிவகிரி ஜமீன் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம்

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்த சிவகிரி ஜமீனின் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை நுங்கம்பாக்கம் ப... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 429 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், களப்பணியாளா்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்புக்காக 429 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

2 டன் கஞ்சா அழிப்பு

தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினரால் 187 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு... மேலும் பார்க்க

ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். தியாகராய நகரில் இயங்கிவரும் ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஒரு... மேலும் பார்க்க

மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு

சென்னை ஆழ்வாா்பேட்டையில் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்ட போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினா். சென்னை, திருவொற்றியூா் பகுதியைச் சோ்ந்த 47 வயது பெண் ஒர... மேலும் பார்க்க