செய்திகள் :

அதிமுக விவகாரம்: செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை!

post image

ஈரோடு: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஏற்பாடு செய்த பாராட்டு விழாவில் ஜெயலலிதா, எம்ஜிஆர் படம் இல்லாதது குறித்து அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அத்திக்கடவு - அவினாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகளிடம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில், செங்கோட்டையன் வீட்டுக்கு 2 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வழக்கமாக இரு காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருக்கும் நிலையில், தற்போது மேலும் 4 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு: இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

இந்த நிலையில், அதிமுக இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ள நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் தமது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆதரவாளர்களுடனான ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எது மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக மூத்த தலைவரான செங்கோட்டையனின் செயல்பாடுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாம் ரிசர்ச் இந்தியாவில் ரூ.10,000 கோடி முதலீடு: அஷ்வினி வைஷ்ணவ் தகவல்

புதுதில்லி: அமெரிக்காவைச் சேர்ந்த செமிகண்டக்டர் நிறுவனமான லாம் ரிசர்ச், இந்தியாவில் குறிப்பிடத்தக்க ரூ.10,000 கோடி முதலீட்டை அறிவித்துள்ளது என மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ... மேலும் பார்க்க

பாரிஸில் பிரதமர் மோடி - சுந்தர் பிச்சை சந்திப்பு

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையும் பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்துக்கொண்டனர். இந்த சந்திப்பின்போது இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தில் கூகுள் நெர... மேலும் பார்க்க

பிப். 17-ல் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனை!

வருகிற பிப். 17 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு ... மேலும் பார்க்க

வார விடுமுறை நாள்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

வார விடுமுறை நாள்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.இது பற்றி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்... மேலும் பார்க்க

தமிழகத்திற்கு அண்ணாமலை நிதி பெற்றுத் தரலாமே! - அன்பில் மகேஸ்

ஒவ்வொரு முறையும் தில்லி செல்லும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக பள்ளி மாணவர்களுக்கு நிதி பெற்றுத் தரலாமே என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய அவர், "தமிழக பாஜக... மேலும் பார்க்க

பணக் கொழுப்பு இருந்தால் தேர்தல் வியூக நிபுணர்கள் தேவை: சீமான்

பணக் கொழுப்பு அதிகமாக இருந்தால் தேர்தல் வியூக நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க