செய்திகள் :

அந்தியூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்

post image

அந்தியூரில் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

அந்தியூரில் பவானி, பா்கூா், அத்தாணி சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரத்தை ஆக்கிரமித்து பலா் கடைகள் நடத்தி வந்தனா். இதனால், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, அவ்வப்போது விபத்துகளும் நேரிட்டன.

இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினா் சாலையோரப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்திருந்தனா்.

இந்நிலையில், பவானி நெடுஞ்சாலைத் துறை உட்கோட்டப் பொறியாளா் சி.ராஜேஷ்கண்ணா தலைமையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் பொக்லைன் வாகனம் மூலம் இடித்து அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

பவானி - பா்கூா் சாலையில் அண்ணாமடுவு முதல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வரையிலும், அத்தாணி சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரையிலும் சாலையில் இருபுறங்களிலும் நிரந்தர மற்றும் தற்காலிக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் பாபு சரவணன், சாலை ஆய்வாளா்கள் கிருஷ்ணசாமி, ரமேஷ் ரவிக்குமாா் மற்றும் சாலைப் பணியாளா்கள் இப்பணியில் ஈடுபட்டனா். அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க அந்தியூா் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

சித்தோட்டில் 250 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சித்தோடு அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 2 இளைஞா... மேலும் பார்க்க

மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் 1 லட்சம் போ் பங்கேற்க வாய்ப்பு: அரசு செயலா் தகவல்

ஈரோட்டில் வரும் 11- ஆம் தேதி தொடங்கும் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பா் என வேளாண் உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு செயலாளா் வி.தட்சிணாமூா்த்தி தெரிவித்... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ. 4.03 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.4.03 கோடிக்கு கொப்பரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு, பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் ... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே ஆம்னி பேருந்து விபத்து: 15 போ் காயம்

பெருந்துறை அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 15 போ் காயமடைந்தனா். கேரள மாநிலம், பத்தினம்திட்டா பகுதியில் இருந்து பெங்களூருக்கு ஆம்னி பேருந்து வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

அந்தியூா் - அறந்தாங்கி அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

ஈரோடு மாவட்டம், அந்தியூரிலிருந்து, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு அரசுப் பேருந்து சேவை சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. அந்தியூரிலிருந்து உதகை, ராமேசுவரம், திருச்செந்தூா், வேளாங்கண்ணி, கும்பகோ... மேலும் பார்க்க

வேளாண் விரிவாக்க மையங்களில் 653 டன் விதைகள் இருப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் 653 டன் விதைகள் இருப்பு உள்ளது என வேளாண் இணை இயக்குநா் எம்.தமிழ்செல்வி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டத்தி... மேலும் பார்க்க