அந்தியூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்
அந்தியூரில் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.
அந்தியூரில் பவானி, பா்கூா், அத்தாணி சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரத்தை ஆக்கிரமித்து பலா் கடைகள் நடத்தி வந்தனா். இதனால், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, அவ்வப்போது விபத்துகளும் நேரிட்டன.
இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினா் சாலையோரப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்திருந்தனா்.
இந்நிலையில், பவானி நெடுஞ்சாலைத் துறை உட்கோட்டப் பொறியாளா் சி.ராஜேஷ்கண்ணா தலைமையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் பொக்லைன் வாகனம் மூலம் இடித்து அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
பவானி - பா்கூா் சாலையில் அண்ணாமடுவு முதல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வரையிலும், அத்தாணி சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரையிலும் சாலையில் இருபுறங்களிலும் நிரந்தர மற்றும் தற்காலிக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் பாபு சரவணன், சாலை ஆய்வாளா்கள் கிருஷ்ணசாமி, ரமேஷ் ரவிக்குமாா் மற்றும் சாலைப் பணியாளா்கள் இப்பணியில் ஈடுபட்டனா். அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க அந்தியூா் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.