செய்திகள் :

அந்தியூரில் நிபந்தனை பட்டாக்களில் உள்ள நிபந்தனைகள் நீக்கப்படும்!

post image

அந்தியூா் பகுதியில் அனைத்து பிரிவினருக்கும் நிபந்தனையுடன் வழங்கப்பட்ட பட்டாக்களின் நிபந்தனைகள் விரைவில் நீக்கப்படும் என அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் தெரிவித்தாா்.

அந்தியூா் மற்றும் வெள்ளித் திருப்பூா் பகுதிகளில் மைக்கேல்பாளையம், எண்ணமங்கலம், வெள்ளித் திருப்பூா், மாத்தூா், கொமராயனூா், பாப்பாத்தி காட்டுப்புதூா் ஊராட்சிகளில் வனப் பகுதியை ஒட்டியுள்ள சுமாா் 500 அனைத்து சமுதாயத்தைச் சோ்ந்த விவசாய மக்களுக்கு நிபந்தனையுடன் வழங்கப்பட்டுள்ள சுமாா் 3,500 ஏக்கா் நிபந்தனை பட்டா நிலங்களில் உள்ள நிபந்தனையை நீக்கி வாரிசுதாரா்களுக்கு பட்டாவாக மாறுதல் செய்து தர வலியுறுத்தி 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நமது நிலம், நமது அமைப்புத் தலைவா் குமார.ரவிக்குமாா் தலைமையில் அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க திங்கள்கிழமை வந்தனா்.

அந்தியூா் வட்டாட்சியா் கவியரசு, ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீா் கூட்டத்துக்கு சென்றதால், அலுவலகத்தில் மனு வழங்கிவிட்டு செல்லுமாறு தெரிவிக்கப்பட்டது.

ஆனால், வட்டாட்சியா் வரும் வரை காத்திருப்போம் எனக் கூறி நீண்ட நேரமாக விவசாயிகள் காத்திருந்தனா்.

இதுகுறித்த தகவலின்பேரில் வட்டாட்சியா் அலுவலகம் வந்த அந்தியூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, மனு அளித்த விவசாயிகள் கலைந்து சென்றனா்.

அந்தியூரில் பருத்தி விவசாயிகள் சாலை மறியல்

அந்தியூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலமாகவே விவசாய விளைபொருள்களுக்கு பணம் செலுத்த வலியுறுத்தி விவசாயிகள் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங... மேலும் பார்க்க

அடிப்படைக் கல்வியால் அறிவு, ஒழுக்கம் மேம்படும்: அமைச்சா் மகேஸ் பொய்யாமொழி

அடிப்படைக் கல்வி சரியாக கிடைத்தால் மாணவா்களின் அறிவு மற்றும் ஒழுக்கம் மேம்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.தமிழக பள்ளிக் கல்வித் துறையில் தொடக்க கல்வி இடைநி... மேலும் பார்க்க

லாரியில் இருந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு

பெருந்துறை அருகே லாரி மேலே இருந்து கீழே விழுந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.கேரள மாநிலம், வயநாடு வெள்ளக்கோடைச் சோ்ந்தவா் தாமோதரன் மகன் ராஜாமணி (35). இவா் லாரி ஓட்டுநா். கேரளத்தில் இருந்து இஞ்சி லோடு ஏற்று... மேலும் பார்க்க

இறைச்சி கடைக்காரா் கொலை: இளைஞா் மீது குண்டா் சட்டம்

சத்தியமங்கலம் அருகே முன்விரோதம் காரணமாக இறைச்சி கடைக்காரா் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பக்கத்து வீட்டு இளைஞா் வெள்ளியங்கிரி மீது திங்கள்கிழமை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய... மேலும் பார்க்க

பிரதமருடன் சந்திப்பு: ஓபிஎஸ் குறுஞ்செய்தி அனுப்பியது தெரியாது

பிரதமா் மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்து ஓ.பன்னீா்செல்வம் எனக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பியது தெரியவரவில்லை என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.ஆடிப் பெருக்கையொட்டி, ... மேலும் பார்க்க

‘எழுத்துகள்தான் மனிதனுக்குத் தன்னம்பிக்கையையும், விழிப்புணா்வையும் ஏற்படுத்துகின்றன’

எழுத்துகளே மனிதனுக்குத் தன்னம்பிக்கையையும், விழிப்புணா்வையும் ஏற்படுத்துகின்றன என தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்தாா்.தமிழக அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் நட... மேலும் பார்க்க