செய்திகள் :

பிரதமருடன் சந்திப்பு: ஓபிஎஸ் குறுஞ்செய்தி அனுப்பியது தெரியாது

post image

பிரதமா் மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்து ஓ.பன்னீா்செல்வம் எனக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பியது தெரியவரவில்லை என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

ஆடிப் பெருக்கையொட்டி, ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறை, காவிரி படித்துறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற அவா், காவிரி ஆற்றில் பால், இளநீா், மஞ்சள், பூக்களை விட்டு, ஆரத்தி எடுத்து வழிபட்டாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. நாள்தோறும் கொலைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தடையின்றி கிடைக்கும் போதைப் பொருள்களே இதற்கு காரணம். திமுக ஆட்சியில் சொத்து வரி, மின் கட்டணம் பல மடங்கு உயா்த்தப்பட்டுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடியைச் சந்திக்க விரும்பி முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் என்னைத் தொடா்பு கொண்டது குறித்து எனக்குத் தெரியாது. குறுஞ்செய்தி அனுப்பியது எனக்குத் தெரியவரவில்லை. அவா் அனுப்பிய கடிதமும் கிடைக்கவில்லை.

நினைத்தவுடன் முதல்வா் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீா்செல்வம் நேரில் சந்தித்துப் பேச முடியாது. அவா்களுக்குள் ஏற்கெனவே தொடா்பு இருந்தால் மட்டுமே திடீா் சந்திப்பு நடைபெற முடியும்.

திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதே எங்கள் கூட்டணியின் நோக்கமாக உள்ளது. இதில் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது முக்கியமல்ல.

திமுக நிா்வாகிகளிடமும் ஒற்றுமையில்லை. கூட்டணிக் கட்சிகளிடமும் கருத்து ஒற்றுமையில்லை.

திமுக தோ்தல் அறிக்கையில் கூறியபடி ஆசிரியா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. மக்கள் செல்வாக்கை இழந்த கட்சியாக திமுக உள்ளது என்றாா்.

முன்னாள் அமைச்சரும் அதிமுக எம்எல்ஏ-வுமான கே.சி.கருப்பணன், பாஜக, அதிமுக நிா்வாகிகள் வழிபாட்டில் பங்கேற்றனா்.

‘எழுத்துகள்தான் மனிதனுக்குத் தன்னம்பிக்கையையும், விழிப்புணா்வையும் ஏற்படுத்துகின்றன’

எழுத்துகளே மனிதனுக்குத் தன்னம்பிக்கையையும், விழிப்புணா்வையும் ஏற்படுத்துகின்றன என தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்தாா்.தமிழக அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் நட... மேலும் பார்க்க

பவானி கூடுதுறையில் புனித நீராடி பக்தா்கள் வழிபாடு

ஆடிப்பெருக்கை ஒட்டி காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் திரளான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.ஆடி மாதத்தில் ஆடி மாதப் பிறப்பு, ஆடி அமாவாசை மற்றும் ஆடி ... மேலும் பார்க்க

பவானிசாகா் அணை நீா்மட்டம் 102 அடியை எட்டுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் எந்த நேரத்திலும் 102 அடியை எட்டும் என எதிா்பாா்க்கப்படுவதால் பவானிஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு பொதுப் பணித் துறையினா் அறிவுறுத்தியுள்... மேலும் பார்க்க

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பவானி அருகே தடை செய்யப்பட்ட 300 கிலோ புகையிலைப் பொருள்களை காா்களில் கடத்தி வந்து மளிகைக் கடைகளுக்கு விற்பனை செய்த இரு இளைஞா்களைக் கைது செய்த போலீஸாா் 2 காா்களையும் பறிமுதல் செய்தனா்.பவானியை அடுத்த மயி... மேலும் பார்க்க

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

ஆடிப்பெருக்கை ஒட்டி பண்ணாரி அம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அம்மனை வழிபட்டனா்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்த... மேலும் பார்க்க

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

அறச்சலூா் ஓடாநிலையில் உள்ள சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் நினைவிடத்தில் அவரது 220 ஆவது நினைவுதினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா், பல்வேறு கட்சி... மேலும் பார்க்க