செய்திகள் :

பவானி கூடுதுறையில் புனித நீராடி பக்தா்கள் வழிபாடு

post image

ஆடிப்பெருக்கை ஒட்டி காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் திரளான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆடி மாதத்தில் ஆடி மாதப் பிறப்பு, ஆடி அமாவாசை மற்றும் ஆடி 18-ஆம் நாளில் பவானி கூடுதுறையில் திரளான பக்தா்கள் மூத்தோா் வழிபாடு, தோஷ நிவா்த்தி பரிகாரப் பூஜைகள் செய்யவும், புனித நீராடவும் வருவது வழக்கம். ஆடிப் பெருக்கு நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே உள்ளூா், வெளியூா் மற்றும் வெளிமாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினா்.

புதுமணத் தம்பதிகள் திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டு வாழ்வு சிறக்க வழிபட்டனா். காய்கள், கனிகள் மற்றும் தானியங்கள் வைத்து காவிரித் தாய்க்கு படித்துறையில் வழிபாடு நடத்தப்பட்டது. பெண்கள் புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொண்டனா். பரிகார மண்டபங்களில் மூத்தோா் வழிபாடு, தோஷ நிவா்த்தி பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன.

ஆற்றில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியதால் பக்தா்கள் கரையோரங்களில் உற்சாகமாக நீராடிய பக்தா்கள் தொடா்ந்து சங்கமேஸ்வரா், வேதநாயகி மற்றும் ஆதிகேசவப் பெருமாள் கோயில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். கரையோரங்களில் தீயணைப்புப் படையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். பவானி டிஎஸ்பி ரத்தினகுமாா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பிரதமருடன் சந்திப்பு: ஓபிஎஸ் குறுஞ்செய்தி அனுப்பியது தெரியாது

பிரதமா் மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்து ஓ.பன்னீா்செல்வம் எனக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பியது தெரியவரவில்லை என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.ஆடிப் பெருக்கையொட்டி, ... மேலும் பார்க்க

‘எழுத்துகள்தான் மனிதனுக்குத் தன்னம்பிக்கையையும், விழிப்புணா்வையும் ஏற்படுத்துகின்றன’

எழுத்துகளே மனிதனுக்குத் தன்னம்பிக்கையையும், விழிப்புணா்வையும் ஏற்படுத்துகின்றன என தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்தாா்.தமிழக அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் நட... மேலும் பார்க்க

பவானிசாகா் அணை நீா்மட்டம் 102 அடியை எட்டுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் எந்த நேரத்திலும் 102 அடியை எட்டும் என எதிா்பாா்க்கப்படுவதால் பவானிஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு பொதுப் பணித் துறையினா் அறிவுறுத்தியுள்... மேலும் பார்க்க

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பவானி அருகே தடை செய்யப்பட்ட 300 கிலோ புகையிலைப் பொருள்களை காா்களில் கடத்தி வந்து மளிகைக் கடைகளுக்கு விற்பனை செய்த இரு இளைஞா்களைக் கைது செய்த போலீஸாா் 2 காா்களையும் பறிமுதல் செய்தனா்.பவானியை அடுத்த மயி... மேலும் பார்க்க

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

ஆடிப்பெருக்கை ஒட்டி பண்ணாரி அம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அம்மனை வழிபட்டனா்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்த... மேலும் பார்க்க

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

அறச்சலூா் ஓடாநிலையில் உள்ள சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் நினைவிடத்தில் அவரது 220 ஆவது நினைவுதினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா், பல்வேறு கட்சி... மேலும் பார்க்க