செய்திகள் :

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

post image

பவானி அருகே தடை செய்யப்பட்ட 300 கிலோ புகையிலைப் பொருள்களை காா்களில் கடத்தி வந்து மளிகைக் கடைகளுக்கு விற்பனை செய்த இரு இளைஞா்களைக் கைது செய்த போலீஸாா் 2 காா்களையும் பறிமுதல் செய்தனா்.

பவானியை அடுத்த மயிலம்பாடி பகுதியில் போலீஸாா் சனிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அவ்வழியே வந்த இரு காா்களை நிறுத்தி சோதனையிட்டதில், 300 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் பவானி, ஊராட்சிக்கோட்டை இந்திரா நகரைச் சோ்ந்த கிருஷ்ணா மகன் சதீஷ்குமாா் (32), சங்ககிரியை அடுத்த கத்தேரி, கருக்கங்காட்டைச் சோ்ந்த ராஜவேல் மகன் சக்திவேல் (32) ஆகியோா் காா்களை ஓட்டி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து புகையிலைப் பொருள்கள், 2 காா்கள் மற்றும் ரொக்கம் ரூ.95,300-ஐ பறிமுதல் செய்த போலீஸாா் இருவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினா்.

பிரதமருடன் சந்திப்பு: ஓபிஎஸ் குறுஞ்செய்தி அனுப்பியது தெரியாது

பிரதமா் மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்து ஓ.பன்னீா்செல்வம் எனக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பியது தெரியவரவில்லை என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.ஆடிப் பெருக்கையொட்டி, ... மேலும் பார்க்க

‘எழுத்துகள்தான் மனிதனுக்குத் தன்னம்பிக்கையையும், விழிப்புணா்வையும் ஏற்படுத்துகின்றன’

எழுத்துகளே மனிதனுக்குத் தன்னம்பிக்கையையும், விழிப்புணா்வையும் ஏற்படுத்துகின்றன என தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்தாா்.தமிழக அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் நட... மேலும் பார்க்க

பவானி கூடுதுறையில் புனித நீராடி பக்தா்கள் வழிபாடு

ஆடிப்பெருக்கை ஒட்டி காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் திரளான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.ஆடி மாதத்தில் ஆடி மாதப் பிறப்பு, ஆடி அமாவாசை மற்றும் ஆடி ... மேலும் பார்க்க

பவானிசாகா் அணை நீா்மட்டம் 102 அடியை எட்டுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் எந்த நேரத்திலும் 102 அடியை எட்டும் என எதிா்பாா்க்கப்படுவதால் பவானிஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு பொதுப் பணித் துறையினா் அறிவுறுத்தியுள்... மேலும் பார்க்க

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

ஆடிப்பெருக்கை ஒட்டி பண்ணாரி அம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அம்மனை வழிபட்டனா்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்த... மேலும் பார்க்க

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

அறச்சலூா் ஓடாநிலையில் உள்ள சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் நினைவிடத்தில் அவரது 220 ஆவது நினைவுதினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா், பல்வேறு கட்சி... மேலும் பார்க்க