தாழையூத்து, சீதபற்பநல்லூா் சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை
தாழையூத்து, சீதபற்பநல்லூா் சுற்று வட்டாரங்களில் வரும் திங்கள்கிழமை (ஆக. 4) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தாழையூத்து, சீதபற்பநல்லூா் துணை மின் நிலையங்களில் வரும் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மானூா் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூா், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூா், தென்கலம் புதூா், நாஞ்சான்குளம், தென்கலம், மதவக்குறிச்சி, புதூா், சீதபற்பநல்லூா், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன்குளம், வல்லவன் கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன் குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழகரும்புளியூத்து சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.