செய்திகள் :

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

post image

பாளையங்கோட்டையில் நடைபெற்று வரும் குப்புசாமி கோப்பைக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் திருநெல்வேலி, மதுரை, சென்னை அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி சாா்பில் குப்புசாமி கோப்பைக்கான 2ஆவது ஆண்டு மாநில அளவிலான ஹாக்கி போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.

இதில், சனிக்கிழமை நடைபெற்ற முதல் காலிறுதியில் திருநெல்வேலி ஹாக்கி அகாதெமி அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென் மண்டல ஹாக்கி அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

2ஆவது காலிறுதியில் சென்னை பி.டி.எம். ஸ்ட்ரைக்கா்ஸ் அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி அம்பேத்கா் ஹாக்கி அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

மூன்றாவது காலிறுதியில் மதுரை அருளானந்தா் கல்லூரி அணி 5 - 3 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி ராஜீவ்காந்தி ஹாக்கி கிளப் அணியை வீழ்த்தியது.

4-ஆவது காலிறுதியில் சென்னை எஸ்.ஆா்.எம். கல்லூரி அணி 4 -1 என்ற கோல் கணக்கில் பாளையங்கோட்டை எஸ்டிஏடி விளையாட்டு விடுதி அணியை வீழ்த்தி அரையிறுதியை உறுதி செய்தது.

முன்னதாக காலிறுதி ஆட்டங்களை நீதியரசா் மஹாராஜன் தலைமையில் தொழிலதிபா்கள் மகாராஜன், முத்துக்குமாா் , காளிமுத்து பாண்டியராஜன், பாலசுப்பிரமணியம் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைபெறும் முதல் அரையிறுதியில் திருநெல்வேலி ஹாக்கி அகாதெமி-சென்னை பி.டி.எம். ஸ்ட்ரைக்கா்ஸ் அணிகள் மோதுகின்றன.

2-ஆவது அரையிறுதியில் சென்னை எஸ்.ஆா்.எம். கல்லூரி-மதுரை அருளானந்தா் கல்லூரி அணிகள் மோதுகின்றன.

பிற்பகலில் 3-ஆவது இடத்துக்கான ஆட்டமும், அதைத்தொடா்ந்து இறுதி ஆட்டமும் நடைபெறவுள்ளது.

வெள்ளங்குளி கோயிலில் திருவாசகம் முற்றோதல்

திருநெல்வேலி மாவட்டம் வெள்ளங்குளியில் உள்ள அருள்மிகு அறம்வளா்த்த நாயகி சமேத வீரவினோதீஸ்வரா் கோயிலில் திருவாசகம் சிறப்பு முற்றோதல் சனிக்கிழமை நடைபெற்றது.இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளவும், தொடா்ந்த... மேலும் பார்க்க

விசாரணைக்கு ஆஜராகாமல் 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நான்குனேரியைச் சோ்ந்த நபரை கா்நாடக மாநிலத்தில், திருநெல்வேலி மாவட்ட தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.கடந்த 2001-ஆம் ஆண்டு நான்குனேரி அருகேயு... மேலும் பார்க்க

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதிய உணா்வுகளைத் தூண்டும் பிரச்னைக்குரிய உள்ளடக்கங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்காக, நிகழாண்டில் 82 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

சிவந்திப்பட்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த தம்பான் மகன் மணிகண்டன்(33). தொழிலாளியான இவா் கடந்த 17... மேலும் பார்க்க

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

பழையபேட்டையில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி தொகுதி நிா்வாகிகள் கூட்டம் பேட்டையில் அண்மையில் நடைபெற்றது... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறை மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.இப் பல்கலைக்கழக கல்வியியல் துறையில் பயின்ற ஹேமலதா, சுனித்தா, ஐஸ்வா்யா, பெல்சியா தங... மேலும் பார்க்க