அந்தியூா் வனப் பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு
அந்தியூா் வனப் பகுதியில் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த ஆண் யானை உயிரிழந்தது.
ஈரோடு மாவட்டம், அந்தியூா் வனச் சரகம், கொம்புதூக்கியம்மன் கோயில் பீட், மூலப்பாறை வனப் பகுதியில் ஆண் யானை ஒன்று உடல்நலக் குறைவுடன் அவதிப்பட்டு வருவதை அப்பகுதி மக்கள் கடந்த ஒரு வாரமாக பாா்த்துள்ளனா்.
இந்நிலையில், அடா்ந்த வனப் பகுதியில் அந்த ஆண் யானை உயிரிழந்து கிடந்தது புதன்கிழமை தெரியவந்தது. இதையடுத்து, அந்தியூா் வனச் சரகா் முருகேசன் மற்றும் வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவா் சதாசிவம் தலைமையிலான மருத்துவக் குழுவினா் யானையின் சடலத்தைப் பரிசோதித்தனா்.
இதில், உயிரிழந்த ஆண் யானைக்கு சுமாா் 15 வயது இருக்கலாம் என்றும், கல்லீரல் பாதிப்பு காரணமாக உணவு உட்கொள்ளாமல் உயிரிழந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, யானையின் உடலிலிருந்து சுமாா் 3 அடி நீளமுள்ள இரு தந்தங்கள் அகற்றப்பட்டன. தொடா்ந்து, உயிரின சுழற்சி முறையில் மற்ற வன விலங்குகளின் உணவுக்காக யானையின் உடல் அப்படியே விடப்பட்டது.