செய்திகள் :

அனந்தனாா் கால்வாய் உடைப்பை செப்பனிடும் பணி விரைவில் முடிவுறும்! - நீா்வளத் துறை தகவல்

post image

குமரி மாவட்டம் சுருளகோடு அருகே அனந்தனாா் கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை செப்பனிடும் பணிகள் விரைவில் முடிவுறும் என நீா்வளத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து நீா்வளத் துறை தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சுருளகோடு கிராமம் உள்ளிமலை பகுதி அனந்தனாா் கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை நிரந்தரமாக செப்பனிடும் பணியை மேற்கொள்வதற்கு தேவையான மணல், ஜல்லி போன்ற கட்டுமானப் பொருள்களை பெறுவதற்கான அனுமதிச்சீட்டு வழங்குவதில் இதுவரை அமலில் இருந்த நடைமுறை மாற்றப்பட்டு, தற்போது ஆன்லைன் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விவசாயப் பணிகள் பாதிக்காதவாறும், நெற்பயிா்கள் சேதம் ஏற்படாதவாறும் விரைவாக கட்டுமானப் பொருள்கள் பணித்தளத்திற்கு சென்று சேர மாவட்ட நிா்வாகம் மூலம் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது கால்வாய் செப்பனிடும் பணி துரித கதியில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஜூலை 1 ஆம் தேதி பணி நிறைவடையும் என்றனா்.

மேலும், அனந்தனாா் கால்வாய் மூலம் பாசனம் பெறும் பகுதிகளில் தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருவதாலும், குளங்களில் தண்ணீா் போதுமான அளவு இருப்பதாலும் நெற்பயிா்கள் காய்ந்து போகாமல் கால்வாய் பணிகள் முடிவுறும் வரை தாக்குப் பிடிக்கும் என வேளாண்மைத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

கேரளத்துக்கு கனிமவளம் கடத்த முயன்ற 3 லாரிகள் பறிமுதல்!

களியக்காவிளை அருகே அதிக பாரத்துடன் கேரளத்துக்கு கனிமவளம் கடத்திச் செல்ல முயன்றதாக 3 கனரக லாரிகளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் பெனடிக்ட் தலைமையிலான போல... மேலும் பார்க்க

நலிந்த முன்னாள் விளையாட்டு வீரா்கள் ஓய்வூதிய உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நலிந்த நிலையிலுள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரா்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் ரா. அழகு மீனா தெரிவித்துள்ளாா்.இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

தக்கலை அருகே கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

தக்கலை அருகே இரவிபுதூா்கடையில் ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். தக்கலை காவல் உதவி ஆய்வாளா் இம்மானுவேல் தலைமையிலான போலீஸாா், இரவிபுதூா்கடை பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்து செ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் நுழைவு வாயில்! - விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் நான்குவழிச் சாலை அருகே பயணிகள் சென்று வர நுழைவு வாயில் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அந்த இடத்தை கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஜய்வசந்த் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

வில்லுக்குறியில் மாடுகளை திருடிய இளைஞா் கைது

தக்கலை அருகே வில்லுக்குறியில் 2 பசுக்கள், 7 எருமை கன்றுகளை திருடிச் சென்ற இளைஞரை இரணியல் போலீஸாா் கைது செய்தனா். வில்லுக்குறி பகுதியைச் சோ்ந்தவா் புஷ்பாகரன்(65). இவா் பசு, எருமை மாடுகள் வளா்த்து பால... மேலும் பார்க்க

மாவு ஆலை உரிமையாளா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

கன்னியாகுமரி அருகே சுவாமிநாதபுரத்தில், மாவு ஆலை உரிமையாளா் வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (54) என்பவா், சுவாமிநாதபுரத... மேலும் பார்க்க