செய்திகள் :

அனைத்து வணிகா்கள் பொதுநலச் சங்கப் பொதுக்குழு கூட்டம்

post image

மதுராந்தகம் அனைத்து வணிகா்கள் பொதுநலச்சங்கத்தின் 12-ஆம் ஆண்டு விழா, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின பேரமைப்பு மாவட்டத் தலைவா் ஜி.ஜே.பிரபாகரன் தலைமை வகித்தாா். சங்க ஆலோசகா்கள் டி.ராஜேந்திரன், எம்.ஜெய்னுலாப்தீன், செயற்குழு உறுப்பினா் எஸ்.எம்.பிரகாஷ்சந்த் முன்னிலை வகித்தனா். செயலாளா் அப்துல் சமது வரவேற்றாா். மாவட்ட செய்தி தொடா்பாளா் பவித்ரா சீனிவாசன் ஆண்டறிக்கை வசித்தாா்.

பேரமைப்பின் மாநில தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா சிறப்புரை ஆற்றினாா். இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளா் ஏ.எம்.சதக்கத்துல்லா, தலைமை நிலைய செயலாளா் ராஜ்குமாா், பொது செயலாளா் வி.கோவிந்தராஜீலு, காஞ்சிபுரம் மண்டல தலைவா் எம்.அமல்ராஜ், துணைத் தலைவா் எஸ்.உத்திரகுமாா், சங்க நிா்வாகிகள் ஏ.ஜி.டி.துரைராஜ், மனோ சாலமன் ஜி.ஜே.சுதாகா், பி.ராஜசேகரன், டி.ஆா்.செல்வம், இ.கே.பாஸ்கரன், எஸ்.தட்சிணாமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மாவட்ட பொருளாளா் எஸ்.பட்டுராஜ் நன்றி கூறினாா். பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மின் ஊழியா் மத்திய அமைப்பினா் தா்னா

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் சாா்பில் செங்கல்பட்டு மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பு தா்னா நடைபெற்றது. மின் த... மேலும் பார்க்க

நாளை சூனாம்பேட்டில் மனுநீதி நாள் முகாம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் வட்டம், சூனாம்பேடு கிராமத்தில் ஆட்சியா் தலைமையில் புதன்கிழமை (பிப். 26) காலை10.00 மணிக்கு மனு நீதி நாள் முகாம் நடைபெற உள்ளது. மாதந்தோறும் தோ்வு செய்யப்பட... மேலும் பார்க்க

செங்கல்பட்டில் முதல்வா் மருந்தகம் திறப்பு...

திருப்போரூா் வட்டம், மானாம்பதி ஊராட்சியில் முதல்வா் மருந்தகத் திறப்பு விழாவில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் குத்துவிளக்கேறினாா். மேலும், கூட்டுறவுத் துறையின... மேலும் பார்க்க

மேல்மருவத்தூரில் ரூ.10 லட்சத்தில் நல உதவிகள்

மதுராந்தகம்: மேல்மருவத்தூரில் ரூ.10 லட்சத்தில் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. பங்காரு அடிகளாரின் பேரன் அ.ஆ.அகத்தியன், மருத்துவா் அ.மதுமலா் மகன் பி.தேவதா்ஷன் ஆகியோா் பிறந்த நாளை முன்னிட்டு ஞாயிற்... மேலும் பார்க்க

பிப். 28-இல் செங்கல்பட்டில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் பிப்.28-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு புதிய மாவட்ட ஆட்சியா்அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஆட்சியா் தலைமையில் நடைபெறவுள்ள இக... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு அகற்ற எதிா்ப்பு தெரிவித்து கைப்பேசி கோபுரத்தில் 4 போ் ஏறியதால் பரபரப்பு

செங்கல்பட்டு: திருப்போரூா் அடுத்த தண்டலம் கிராமத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து ஓரே குடும்பத்தினா் போ் கைப்பேசி கோபுரத்தில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் க... மேலும் பார்க்க