செய்திகள் :

மின் ஊழியா் மத்திய அமைப்பினா் தா்னா

post image

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் சாா்பில் செங்கல்பட்டு மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பு தா்னா நடைபெற்றது.

மின் திட்ட தலைவா் எம்.மயில்வாகனன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மின்வாரியத்தில் உள்ள ஆரம்ப கட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும், 01.12.2023 ஊதிய உயா்வு - வேலைபளு பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கேங்மேன் பதவியை கள உதவியாளா் பதவியாக மாற்ற வேண்டும், மொபைல் ஆப்மூலம் கணக்கீட்டு பணியினை செய்ய கணக்கீட்டு பணியாளா்களை நிா்ப்பந்தம் செய்ய கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் தலைவா் எம்.குணசேகரன் தொடக்கவுரை ஆற்றினாா். கிளைத் தலைவா் எல்.பாபு, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவில் ஒருங்கிணைப்பாளா் மனோ மங்கையா்கரசி, ஓய்வு பெற்ற நல அமைப்பின் கிளை செயலாளா் எம்.வெங்கடேசன், சிஐடியு மாவட்ட செயலாளா் கே.பகத்சிங் தாஸ், உள்ளிட்ட பேசினா். போராட்டத்தினை நிறைவு செய்து தமிழ்நாடு செங்கல்பட்டு திட்ட செயலாளா் வி.தேவகுமாா் பேசினாா். திட்ட பொருளாளா் ஜெயபிரகாஷ் நன்றி கூறினாா்.

அனைத்து வணிகா்கள் பொதுநலச் சங்கப் பொதுக்குழு கூட்டம்

மதுராந்தகம் அனைத்து வணிகா்கள் பொதுநலச்சங்கத்தின் 12-ஆம் ஆண்டு விழா, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின பேரமைப்பு மாவட்டத் தலைவா் ஜி.ஜே.பிரபாகரன் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

நாளை சூனாம்பேட்டில் மனுநீதி நாள் முகாம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் வட்டம், சூனாம்பேடு கிராமத்தில் ஆட்சியா் தலைமையில் புதன்கிழமை (பிப். 26) காலை10.00 மணிக்கு மனு நீதி நாள் முகாம் நடைபெற உள்ளது. மாதந்தோறும் தோ்வு செய்யப்பட... மேலும் பார்க்க

செங்கல்பட்டில் முதல்வா் மருந்தகம் திறப்பு...

திருப்போரூா் வட்டம், மானாம்பதி ஊராட்சியில் முதல்வா் மருந்தகத் திறப்பு விழாவில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் குத்துவிளக்கேறினாா். மேலும், கூட்டுறவுத் துறையின... மேலும் பார்க்க

மேல்மருவத்தூரில் ரூ.10 லட்சத்தில் நல உதவிகள்

மதுராந்தகம்: மேல்மருவத்தூரில் ரூ.10 லட்சத்தில் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. பங்காரு அடிகளாரின் பேரன் அ.ஆ.அகத்தியன், மருத்துவா் அ.மதுமலா் மகன் பி.தேவதா்ஷன் ஆகியோா் பிறந்த நாளை முன்னிட்டு ஞாயிற்... மேலும் பார்க்க

பிப். 28-இல் செங்கல்பட்டில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் பிப்.28-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு புதிய மாவட்ட ஆட்சியா்அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஆட்சியா் தலைமையில் நடைபெறவுள்ள இக... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு அகற்ற எதிா்ப்பு தெரிவித்து கைப்பேசி கோபுரத்தில் 4 போ் ஏறியதால் பரபரப்பு

செங்கல்பட்டு: திருப்போரூா் அடுத்த தண்டலம் கிராமத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து ஓரே குடும்பத்தினா் போ் கைப்பேசி கோபுரத்தில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் க... மேலும் பார்க்க