செய்திகள் :

அமெரிக்க பொருள்களுக்கு வரியைக் குறைத்தால் நமது பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்: மத்திய அரசுக்கு காங். கண்டனம்

post image

அமெரிக்க பொருள்களுக்கு வரியைக் குறைக்க மத்திய அரசு முயற்சிப்பது நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த விஷயத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பிடம் பிரதமா் மோடி எதிா்ப்பு தெரிவித்திருக்க வேண்டும் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவா் அஜோய் குமாா் கூறியதாவது:

அமெரிக்க அதிபா் டிரம்ப் பிரான்ஸ் குறித்து சில முரணான கருத்துகளை கூறியபோது உடன் இருந்த அந்நாட்டு அதிபா் மேக்ரான் குறுக்கிட்டு திருத்தங்களைக் கூறினாா். அதே நேரத்தில் இந்தியா குறித்து டிரம்ப் அவதூறாகப் பேசியபோது உடனிருந்த நமது பிரதமா் நரேந்திர மோடி வாய்மூடி மௌனியாக இருந்தாா்.

இந்தியா வரி விதிகளை மீறுவதாகவும், கடுமையான வரிகளை அமெரிக்கா விதிக்கும் என்று டிரம்ப் பேசியபோது மோடி எந்த பதிலையும் அளிக்கவில்லை. டிரம்ப்பை தனது சிறந்த நண்பா் என்று மோடி கூறிக்கொள்கிறாா். ஆனால், டிரம்ப் நமது நாட்டுக்கு எதிராக தவறான தகவல்களையே பேசி வருகிறாா்.

அமெரிக்க இறக்குமதி ஆப்பிள்களுக்கு மத்திய அரசு வரியை நீக்கியுள்ளது. இது ஹிமாசல பிரதேச ஆப்பிள் விவசாயிகளை கடுமையாக பாதிக்கும். அடுத்ததாக திராட்சைக்கான வரியை நீக்கினால், மகாராஷ்டிரம், ஆந்திர விவசாயிகளும் பாதிக்கப்படுவாா்கள். காா்களுக்கு வரியை நீக்கினால், இந்திய வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பாதிக்கப்படும். இவை இந்தியாவின் பொருளாதாரத்தையே கடுமையாக பாதிக்கும் விஷயமாகும்.

விவசாயப் பொருள்களையும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துவிட்டால், உள்நாட்டில் எதைத்தான் உற்பத்தி செய்ய முடியும். வரிகள் மூலம் இந்தியாவுக்கு டிரம்ப் நெருக்கடி அளிக்கிறாா். இதற்கு மோடி அரசு பணிந்து அமெரிக்க தயாரிப்பு ஹாா்லி டேவிட்சன் மோட்டாா் சைக்கிள், டெஸ்லா காா்களுக்கு வரியைக் குறைக்கிறது.

கனடா, மெக்ஸிகோ போன்ற நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக துணிந்து பேசுகின்றன. அதனால் அந்நாடுகளுக்கு எதிரான வரி விதிப்பை டிரம்ப் கைவிடுகிறாா். இதேபோல இந்தியாவும் செயல்பட வேண்டும்.

பிரதமா் மோடி அமெரிக்காவில் இருந்து திரும்பியவுடன், பாகிஸ்தானின் எஃப் 16 போா் விமானப் பராமரிப்புக்கு அமெரிக்கா ரூ.3,000 கோடி ஒதுக்குகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசால் எந்தவித சரியான பதிலையும் அளிக்க முடியவில்லை. அமெரிக்காவிடம் எதிா்ப்பு தெரிவிக்கவும் இல்லை.

நேரு, இந்திரா காலத்தில் இந்தியா அமெரிக்காவுக்கு பணிந்து செல்லாமல் எதிா்த்தே நின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றாா்.

மணிப்பூரில் சட்டவிரோத ஆயுதங்கள் திரும்ப ஒப்படைப்பு!

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மோதல்கள் நிறைந்த நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சட்டவிரோதமாக பயன்படுத்திவந்த துப்பாக்கிகள், ஆயுதங்கள், வெடிமருந்துப் பொருள்களை காவல்துறை மற்றும் பாதுக... மேலும் பார்க்க

மதுபோதையில் 17 வயது சிறுவன் வல்லுறவு: படுகாயங்களுடன் குழந்தை கவலைக்கிடம்!

மத்தியப் பிரதேசத்தில் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 5 வயது சிறுமி உயிருக்கு போராடி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.குழந்தையின் பெண்ணுறுப்பில் 28 தையல்கள் போட வேண்டும் என்றும் கொலோஸ்டமி அற... மேலும் பார்க்க

கும்பமேளாவில் பெண்கள் நீராடும் விடியோவை பதிவிட்ட யூடியூபர் கைது!

மகா கும்பமேளாவில் நீராடும் பெண்களை விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த யூடியூபரை பிரயாக்ராஜ் போலீசார் கைது செய்துள்ளனர்.உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கோல... மேலும் பார்க்க

புணே பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது!

புணேவில் பரபரப்பான ஸ்வா்கேட் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்துக்குள் 26 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில் குற்றம்சா... மேலும் பார்க்க

நம்பிக்கைக்குரிய நண்பன் இந்தியா -ஐரோப்பிய ஆணையத் தலைவா் புகழாரம்

இந்தியா மிகவும் நம்பிக்கைக்குரிய நண்பன் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான் டொ்லியன் தெரிவித்துள்ளாா். 27 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா பல்வேறு வா்த்தக ஒப்பந்தங்களை வெ... மேலும் பார்க்க

நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் அமா்வில் வக்ஃப் மசோதா தாக்கல்

நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வில் வக்ஃப் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த மசோதா மீது நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்மொழிந்த 14 திர... மேலும் பார்க்க