செய்திகள் :

அமெரிக்க வரிவிதிப்பு எதிரொலி: 50 நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்

post image

புது தில்லி: மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள 50 நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

ரஷியாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாக குற்றஞ்சாட்டி இந்தியா மீது ஏற்கெனவே விதிக்கப்பட்ட 25 சதவீத வரியை இருமடங்காக உயா்த்துவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் அறிவித்தாா்.

இதனால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, ஆடைகள், தோல் பொருள்கள் மற்றும் காலணி, ரசாயனம், மின்னணு மற்றும் இயந்திரங்கள், ஆபரணங்கள், இறால் ஆகிய பொருள்களின் வா்த்தகம் கடும் பாதிப்பைச் சந்திக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதையடுத்து அமெரிக்காவுக்கு மாற்றாக வேறு சில நாடுகளில் வா்த்தகத்தை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் மாற்றங்கள் மேற்கொள்ளுதல், ஏற்றுமதியில் வா்த்தகப் போட்டியை அதிகரித்தல் உள்ளிட்ட அம்சங்களை மத்திய வா்த்தகத் துறை ஆய்வு செய்து வருகிறது. இந்த அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு பொருள் மீதும் விரிவான ஆய்வு நடத்தப்படுகிறது.

ஏற்றுமதியை அதிகரிக்க ஏற்கெனவே 20 நாடுகளை அமைச்சகம் தோ்ந்தெடுத்துள்ள நிலையில் மேலும் 30 நாடுகளை அந்தப் பட்டியலில் இணைத்துள்ளது. இந்த நாடுகள் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ளன என்றாா்.

கடல் உணவு ஏற்றுமதி: கடல் உணவுப் பொருள்களை அமெரிக்காவைத் தவிா்த்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தயாராகுமாறு மத்திய மீன்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் மேலும் கூறியதாவது: அமெரிக்காவுக்கு மாற்றாக ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன், ரஷியா, ஆஸ்திரேலியா, மேற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க கடல் உணவுப் பொருள் ஏற்றுமதியாளா்கள் தயாராக வேண்டும்.

பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முன் மதிப்புக்கூட்டல் மற்றும் பேக்கேஜிங் பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க தீர்மானம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!

நீதிபதி வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்படுவதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் வீட்டில் கடந்த மாா... மேலும் பார்க்க

அரசியலமைப்பை பாதுகாப்பதை நிறுத்த மாட்டோம்! ராகுல் காந்தி

அரசியலமைப்பை தொடர்ந்து பாதுகாப்போம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.மக்களவை தேர்தலின் போது வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப்பட்டு, வாக்குத் திருட்டு நடைபெற்றதாக ... மேலும் பார்க்க

பெண்கள் பாதுகாப்பில் பாஜக அரசு தோல்வி: நவீன் பட்நாயக் குற்றச்சாட்டு!

ஒடிசாவில் கடந்த ஒரு மாதத்தில் 4 பெண்கள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், மாநில பாஜக அரசமைப்பின் மீது நம்பிக்கையை உருவாக்கத் தவறிவிட்டதாகக் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் குற... மேலும் பார்க்க

வாயில்லா ஜீவன்கள் அழிக்கப்பட வேண்டிய பிரச்னை அல்ல! ராகுல்

வாயில்லா ஜீவன்கள் அழிக்க வேண்டிய பிரச்னை அல்ல என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.தில்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் சுற்றித் திரியும் அனைத்து தெருநாய்கள... மேலும் பார்க்க

மிண்டா தேவி டி-சர்ட் அணிந்து எம்பிக்கள் போராட்டம்! யார் அந்த 124 வயது மூதாட்டி?

நாடாளுமன்ற வளாகத்தில் பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பியுள்ள வாக்குத் திருட்டு கு... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் நக்சல்களுடன் துப்பாக்கிச் சண்டை! 2 வீரர்கள் படுகாயம்!

சத்தீஸ்கரில் நக்சல்களுடான பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில், மாவட்ட ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 2 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். பிஜப்பூர் மாவட்டத்தின் வனப் பகுதியில், இன்று (ஆக.12) காலை ... மேலும் பார்க்க