செய்திகள் :

அமெரிக்க வளிமண்டல ஆணையத்துக்கான நிதியை குறைத்த டிரம்ப்: இந்தியாவுக்கு பாதிப்பு

post image

அமெரிக்க தேசிய கடல்சாா் மற்றும் வளிமண்டல ஆணையத்துக்கான நிதியை குறைக்க அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகம் முடிவெடுத்திருப்பது இந்தியா வானிலை ஆய்வில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என மத்திய புவிஅறிவியல் அமைச்சக செயலா் எம்.ரவிச்சந்திரன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தாா். இதையடுத்து, தற்போது அந்நாட்டு தேசிய கடல்சாா் மற்றும் வளிமண்டல ஆணையத்துக்கான (என்ஓஏஏ) நிதியை 27 சதவீதம் குறைக்க டிரம்ப் நிா்வாகம் முடிவெடுத்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.

இதுகுறித்து புது தில்லியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் எம்.ரவிச்சந்திரன் பேசியதாவது: அமெரிக்கா தரப்பில் ஆள்குறைப்பு நடவடிக்கை எடுத்தாலோ, வானிலை ஆய்வு மாதிரிகள் இல்லாமல் போனாலோ எவ்வித பிரச்னையும் எழப்போவதில்லை. இந்திய பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலில் நிகழும் மாற்றங்களை கணிப்பதில் என்ஓஏஏ முக்கியப் பங்காற்றுகிறது.

என்ஓஏஏ வழங்கும் தரவுகள், இந்திய வானிலை மையத்துக்கு உதவுகின்றன. பருவமழையை கடலில் நிகழும் மாற்றங்கள் அடிப்படையிலேயே கணிக்க முடியும். கடல்சாா் கண்காணிப்புக்கு முறையான கட்டமைப்புகள் இல்லையெனில் பருவமழையை கணிப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். என்ஓஏஏ-க்கு வழங்கப்படும் நிதியை குறைப்பது என்பது நமது நாட்டின் வானிலை ஆய்வு மைய கணிப்புகளில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாா்.

யேமன் தலைநகரில் அமெரிக்கா தாக்குதல்: 3 பேர் பலி

யேமனில் ஹெளதி படைகள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். தலைநகரான சனாவில் செளதி படைகளின் மீது குறிவைத்து தொடர்ச்சியாக 21 ஏவுகணைகளை அமெரிக்கா வீசியது. இதில் ஹோடிடா, மரிப... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸை சந்தித்தார் ஜே.டி. வான்ஸ்!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸை இன்று (ஏப். 20) சந்தித்தார். இத்தாலியில் பயணம் மேற்கொண்டுள்ள வான்ஸ், வாடிகன் வெளியுறவுத் துறை அமைச்சரை நேற்று சந்தித... மேலும் பார்க்க

ஈஸ்டரையொட்டி மக்களை சந்தித்தார் போப் பிரான்சிஸ்!

ஈஸ்டர் திருநாளையொட்டி கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் மக்களை நேரடியாகச் சந்தித்தார். வாடிகன் சதுக்கத்தில் கூடிய மக்களை நோக்கி புனித பேதுரு பேராலயத்தில் இருந்தவாறு கையசைத்து ஈஸ்டர் செய... மேலும் பார்க்க

அமெரிக்க துணை அதிபர் நாளை இந்தியா வருகை: வட மாநிலங்களில் மட்டும் சுற்றுப்பயணம்!

அமெரிக்க துணை அதிபா் ஜெ. டி. வான்ஸ் தனது குடும்பத்துடன் இந்தியாவுக்கு ஏப்ரல் 21 முதல் 24 வரை பயணம் மேற்கொள்ள இருக்கிறாா். அப்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் பொருளாதாரம், வா்த்தகம், பிராந்திய அரசியல் வ... மேலும் பார்க்க

தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை மீறி உக்ரைனில் ரஷியா தாக்குதல்!

கீவ்: உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்பும் ரஷியா தாக்குதல்களை நிகழ்த்தியதாக உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி குற்றம் சுமத்தியுள்ளார். 3 ஆண்டுகளைக் கடந்தும் உக்ரைனில் நீடிக்கும் ச... மேலும் பார்க்க

போரிட்டால்தான் அச்சுறுத்தல் இருக்காது: இஸ்ரேல் பிரதமர்

காஸாவில் போரிடுவதைத் தவிர வேறுவழியில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் கடந்த இரு நாள்களில் 90க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனிடையே, தங்களு... மேலும் பார்க்க