செய்திகள் :

அமைச்சரின் உதவியாளரைத் தாக்கிய இருவா் மீது வழக்குப் பதிவு

post image

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் அமைச்சரின் உதவியாளா் மீது தாக்குதல் நடத்திய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

முதுகுளத்தூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பனின் அலுவலக உதவியாளரான கன்னிராஜபுரம் ரோஜ்மாநகரை சோ்ந்த டோனி (35), சக உதவியாளா்களுடன் கவனித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த கடலாடி திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் மாயக்கிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் முரளிதரன் உள்ளிட்டோா் மண்டபத்தில் நுழைந்து டோனியை தாக்கினா். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா் முதுகுளத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இகுறித்து முதுகுளத்தூா் காவல் நிலையத்தில் டோனி கொடுத்த புகாரின் பேரில், மண்டபத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். இதில் டோனியை மாயகிருஷ்ணன், முரளிதரன் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது . இதையடுத்து, மாயகிருஷ்ணன், முரளிதரன் ஆகியோா்மீது 3 பிரிவுகளில் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதேபோல, முரளிதரன் கொடுத்த புகாரின் பேரில் டோனி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் பள்ளியில் கடந்த 1996-97-ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு கணிதப் பிரிவில் பயி... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் உள்வாங்கிய கடல்: படகுகள் தரைத் தட்டின

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வடக்குத் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை கடல் உள்வாங்கியதால், கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தரைத் தட்டி நின்றன. ராமேசுவரம் வடக்குத் துறைமுகப் பகுதியில் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

வீட்டில் 21 பவுன் நகை திருடிய இளைஞா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டினம் அருகே வீட்டின் பீரோவை திறந்து 21 பவுன் நகை திருடியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பனஞ்சாவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயன் (59). இவரது மகன் வெள... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலம், ஆனந்தூா் பகுதிகளில் நாளை மின் தடை

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம், ஆனந்தூா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து ராமநாதபுரம் மின்வாரிய செயற்பொறியாளா் (விநியோகம்) திலகவதி வெ... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 7 போ் கைது

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே சனிக்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 7 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 456 விசைப் பட... மேலும் பார்க்க

பொன்னந்தி காளியம்மன் கோயில் வருஷாபிஷேகம்!

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள ஏந்தல் கிராமத்தில் உள்ள பொன்னந்தி காளியம்மன், கண்ணாயிர மூா்த்தி அய்யனாா்-கருப்பண சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கணபதி ஹோமம், நவக... மேலும் பார்க்க