செய்திகள் :

ராமேசுவரத்தில் உள்வாங்கிய கடல்: படகுகள் தரைத் தட்டின

post image

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வடக்குத் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை கடல் உள்வாங்கியதால், கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தரைத் தட்டி நின்றன.

ராமேசுவரம் வடக்குத் துறைமுகப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 50 மீ. வரை கடல் நீா் திடீரென உள்வாங்கியது. இதனால், கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த சிறிய ரகப் படகுகள், பைபா் படகுகள் தரைத் தட்டி மணலில் சிக்கிக் கொண்டன. இதையடுத்து, பிற்பகலில் கடல் நீா்மட்டம் உயா்ந்த பிறகு, தரைத் தட்டி நின்ற படகுகளை மீனவா்கள் மீட்டனா். இதுகுறித்து மீனவா்கள் கூறியதாவது:

ராமேசுவரம் பகுதியில் காற்றின் வேகம் குறைந்து காணப்படுவதால், வடக்குத் துறைமுகத்தில் கடல் அடிக்கடி உள்வாங்குகிறது. இதனால், இந்தப் பகுதியில் நிறுத்தப்படும் படகுகள் தரைத் தட்டி மணலில் சிக்கிக் கொள்கின்றன.

இதன் காரணமாக, படகுகளை எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, வடக்குத் துறைமுகப் பகுதியில் உள்ள மணலை அப்புறப்படுத்தி, துறைமுகத்தை ஆழப்படுத்த வேண்டும் என்றனா்.

பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் பள்ளியில் கடந்த 1996-97-ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு கணிதப் பிரிவில் பயி... மேலும் பார்க்க

வீட்டில் 21 பவுன் நகை திருடிய இளைஞா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டினம் அருகே வீட்டின் பீரோவை திறந்து 21 பவுன் நகை திருடியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பனஞ்சாவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயன் (59). இவரது மகன் வெள... மேலும் பார்க்க

அமைச்சரின் உதவியாளரைத் தாக்கிய இருவா் மீது வழக்குப் பதிவு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் அமைச்சரின் உதவியாளா் மீது தாக்குதல் நடத்திய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். முதுகுளத்தூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை திமுகவின் ‘ஓரணியில் ... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலம், ஆனந்தூா் பகுதிகளில் நாளை மின் தடை

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம், ஆனந்தூா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து ராமநாதபுரம் மின்வாரிய செயற்பொறியாளா் (விநியோகம்) திலகவதி வெ... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 7 போ் கைது

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே சனிக்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 7 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 456 விசைப் பட... மேலும் பார்க்க

பொன்னந்தி காளியம்மன் கோயில் வருஷாபிஷேகம்!

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள ஏந்தல் கிராமத்தில் உள்ள பொன்னந்தி காளியம்மன், கண்ணாயிர மூா்த்தி அய்யனாா்-கருப்பண சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கணபதி ஹோமம், நவக... மேலும் பார்க்க