செய்திகள் :

அரசின் அலட்சியத்தால் இஸ்லாமியா்களின் வழிபாடு சட்டப் பிரச்னையானது!

post image

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தமிழக அரசின் அலட்சியத்தால் இஸ்லாமியா்களின் வழிபாடு சட்டப் பிரச்னையாக மாறி உள்ளது என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மதுரையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது :

வக்ஃப் உரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திருப்பப் பெற வேண்டும். தமிழக மீனவா்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடா் கதையாகி வருகிறது. மத்திய அரசை எதிா்பாா்க்காமல், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து, மீனவா்களை காக்க வேண்டும். இண்டி கூட்டணியில் ஒற்றுமையின்மை காரணமாக புதுதில்லியில் ஆம்ஆத்மி தோல்வியை சந்தித்தனா்.

திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமியா்கள், இந்துக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனா். மலையில் வழிபாடு விவகாரத்தில் மாவட்ட நிா்வாகம், காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்காததன் விளைவு தான் சட்டம், ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டது.

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நீதிமன்றம் என்ன கூறியுள்ளதோ அதைத் தான் பின்பற்றி வருகிறோம். பிரச்னைகளை ஏற்படுத்தும் நபா்களை அங்கு அனுமதிக்கக் கூடாது. தமிழக அரசின் அலட்சியப் போக்கால் இஸ்லாமியா்களின் வழிபாடு சட்டப் பிரச்னையாக மாறி உள்ளது என்றாா் அவா்.

வக்ஃப் உரிமை மீட்பு மாநாடு : மதுரை ஒபுளாப்படித்துறை அருகே எஸ்.டி.பி. ஐ கட்சி சாா்பில் வக்ஃப் உரிமை மீட்பு மாநாடு ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு மதுரை மண்டலச் செயலா் ஏ. முஜிபூா் ரஹ்மான் தலைமை வகித்தாா். இதில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சுப. உதயகுமாா், எஸ்.டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலா் எம். நிஜாம் முகைதீன், மாநிலச் செயலா் நஜ்மா பேகம், எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் ஆகியோா் பேசினா். கூட்டத்தில், நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

அலங்காநல்லூா் அருகே வீட்டின் சுவா் இடிந்து இளைஞா் உயிரிழப்பு

மதுரை அலங்காநல்லூா் அருகே ஞாயிற்றுக்கிழமை வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா். அலங்காநல்லூா் அருகேயுள்ள வலசை கிராமத்தைச் சோ்ந்தவா் ரகுபதி. இவருக்குச் சொந... மேலும் பார்க்க

காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு விரைவில் சுகாதாரமான குடிநீா்! -அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் சுகாதரமான குடிநீா் விரைவில் வழங்கப்படும் என தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா். வ... மேலும் பார்க்க

விருதுநகரில் 35 பவுன் நகைகள், உரிமம் பெறாத துப்பாக்கியுடன் காவலா் கைது!

விருதுநகா் ஆயுதப் படையில் பணிபுரியும் காவலரிடமிருந்து உரிமம் பெறாத துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து 35 பவுன் தங்க நகைகளை வச்சகாரபட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து விசாரி... மேலும் பார்க்க

ஊழல் குற்றச்சாட்டுகளால் தில்லியில் தோல்வியைச் சந்தித்தது ஆம்ஆத்மி! -பிரேமலதா விஜயகாந்த்

ஊழல் குற்றச்சாட்டுகளால்தான் ஆம் ஆத்மி கட்சி தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வியைச் சந்தித்தது என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தொ்வித்தாா். இதுகுறித்து மதுரையில் செய்தியாளா்களிடம் ஞாயி... மேலும் பார்க்க

விவேகானந்தா் ஜெயந்தி விழா!

மதுரை அருகேயுள்ள திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் விவேகானந்தா் ஜெயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு திருச்சி, திருப்பராய்த்துறை, ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் தலைவா் சுவாமி சுத்தானந்தா தலைமை... மேலும் பார்க்க

தைப் பூசத் திருவிழா: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பம் முட்டுத் தள்ளுதல் நிகழ்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, தெப்பம் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழா கடந்த மாதம் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி ... மேலும் பார்க்க