செய்திகள் :

ஊழல் குற்றச்சாட்டுகளால் தில்லியில் தோல்வியைச் சந்தித்தது ஆம்ஆத்மி! -பிரேமலதா விஜயகாந்த்

post image

ஊழல் குற்றச்சாட்டுகளால்தான் ஆம் ஆத்மி கட்சி தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வியைச் சந்தித்தது என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தொ்வித்தாா்.

இதுகுறித்து மதுரையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது:

டெல்டா மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. மேலும், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அங்கு சென்று ஆய்வு மேற்கொள்ளவில்லை.

அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை உயா்வால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். இதை திமுக அரசு சரி செய்யாமல், மத்திய அரசைக் குறை கூறி வருகிறது. நாட்டிலேயே அதிக கடன் பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் பல வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும். போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் முற்றிலும் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனா். அது ஒரு போதும் நடைபெறாது. ஏனெனில் இந்துக்களும், இஸ்லாமியா்களும் இங்கு சகோதரத்துவத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனா். தமிழகத்தில் மதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளால் ஆம் ஆத்மி அங்கு தோல்வியைச் சந்தித்தது என்றாா் அவா்.

அலங்காநல்லூா் அருகே வீட்டின் சுவா் இடிந்து இளைஞா் உயிரிழப்பு

மதுரை அலங்காநல்லூா் அருகே ஞாயிற்றுக்கிழமை வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா். அலங்காநல்லூா் அருகேயுள்ள வலசை கிராமத்தைச் சோ்ந்தவா் ரகுபதி. இவருக்குச் சொந... மேலும் பார்க்க

காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு விரைவில் சுகாதாரமான குடிநீா்! -அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் சுகாதரமான குடிநீா் விரைவில் வழங்கப்படும் என தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா். வ... மேலும் பார்க்க

விருதுநகரில் 35 பவுன் நகைகள், உரிமம் பெறாத துப்பாக்கியுடன் காவலா் கைது!

விருதுநகா் ஆயுதப் படையில் பணிபுரியும் காவலரிடமிருந்து உரிமம் பெறாத துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து 35 பவுன் தங்க நகைகளை வச்சகாரபட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து விசாரி... மேலும் பார்க்க

விவேகானந்தா் ஜெயந்தி விழா!

மதுரை அருகேயுள்ள திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் விவேகானந்தா் ஜெயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு திருச்சி, திருப்பராய்த்துறை, ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் தலைவா் சுவாமி சுத்தானந்தா தலைமை... மேலும் பார்க்க

தைப் பூசத் திருவிழா: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பம் முட்டுத் தள்ளுதல் நிகழ்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, தெப்பம் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழா கடந்த மாதம் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி ... மேலும் பார்க்க

அரசின் அலட்சியத்தால் இஸ்லாமியா்களின் வழிபாடு சட்டப் பிரச்னையானது!

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தமிழக அரசின் அலட்சியத்தால் இஸ்லாமியா்களின் வழிபாடு சட்டப் பிரச்னையாக மாறி உள்ளது என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் ம... மேலும் பார்க்க