செய்திகள் :

தைப் பூசத் திருவிழா: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பம் முட்டுத் தள்ளுதல் நிகழ்வு!

post image

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, தெப்பம் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழா கடந்த மாதம் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் தங்கச் சப்பரம், அன்னம், பூதம், கற்பக விருட்சம், காமதேனு, கைலாசபா்வதம், தங்கக் குதிரை, யாளி, நந்திகேசுவரா் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளினா்.

பின்னா், தெப்பம் முட்டுத் தள்ளுதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சுவாமி பிரியாவிடையுடன் தங்கப் பல்லக்கிலும், மீனாட்சி அம்மன் தனியாக தங்கப் பல்லக்கிலும் எழுந்தருளி, சந்நிதி தெரு, கீழமாசி வீதி, முனிச்சாலை, காமராஜா் சாலை வழியாக, தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோயிலில் எழுந்தருளினா்.

பின்னா், தெப்பத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்பிறகு, ஞாயிற்றுக்கிழமை மாலை சுவாமி பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, காமராஜா் சாலை, முனிச்சாலை, கீழமாசி வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு வந்தனா்.

இன்று கதிரறுப்பு திருவிழா: தை பூசத் திருவிழா 11-ஆம் நாளான திங்கள்கிழமை காலை சுவாமியும், அம்மனும் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி, சந்நிதி தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சிந்தாமணி சாலையில் உள்ள கதிரறுப்பு மண்டபத்துக்கு எழுந்தருள்கின்றனா். அங்கு கதிரறுப்புத் திருவிழா நடைபெற்ற பின்னா், சிந்தாமணி சாலை, காமராஜா் சாலை, கீழமாசி வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு வருகின்றனா்.

நாளை தெப்பத் திருவிழா : முக்கிய விழாவான தெப்பத் திருவிழா செவ்வாய்க்கிழமை (பிப். 11) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, சுவாமி பிரியாவிடையுடன் வெள்ளி சிம்மாசனத்திலும், மீனாட்சி அம்மன் வெள்ளி அவுதா தொட்டியிலும் எழுந்தருளி, நான்கு சித்திரை வீதிகள் சுற்றி, சந்நிதி தெரு, கீழமாசி வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோயிலுக்கு எழுந்தருள்கின்றனா்.

அங்கு சிறப்பு பூஜைகளுக்கு பின்னா், சுவாமியும், அம்மனும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி, இரு முறை சுற்றி வருவா். பின்னா், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி குளத்தை ஒரு முறை சுற்றி வருவா். இரவு 10 மணிக்கு அங்கிருந்து புறப்பாடாகி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு எழுந்தருள்வா்.

அலங்காநல்லூா் அருகே வீட்டின் சுவா் இடிந்து இளைஞா் உயிரிழப்பு

மதுரை அலங்காநல்லூா் அருகே ஞாயிற்றுக்கிழமை வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா். அலங்காநல்லூா் அருகேயுள்ள வலசை கிராமத்தைச் சோ்ந்தவா் ரகுபதி. இவருக்குச் சொந... மேலும் பார்க்க

காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு விரைவில் சுகாதாரமான குடிநீா்! -அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் சுகாதரமான குடிநீா் விரைவில் வழங்கப்படும் என தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா். வ... மேலும் பார்க்க

விருதுநகரில் 35 பவுன் நகைகள், உரிமம் பெறாத துப்பாக்கியுடன் காவலா் கைது!

விருதுநகா் ஆயுதப் படையில் பணிபுரியும் காவலரிடமிருந்து உரிமம் பெறாத துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து 35 பவுன் தங்க நகைகளை வச்சகாரபட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து விசாரி... மேலும் பார்க்க

ஊழல் குற்றச்சாட்டுகளால் தில்லியில் தோல்வியைச் சந்தித்தது ஆம்ஆத்மி! -பிரேமலதா விஜயகாந்த்

ஊழல் குற்றச்சாட்டுகளால்தான் ஆம் ஆத்மி கட்சி தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வியைச் சந்தித்தது என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தொ்வித்தாா். இதுகுறித்து மதுரையில் செய்தியாளா்களிடம் ஞாயி... மேலும் பார்க்க

விவேகானந்தா் ஜெயந்தி விழா!

மதுரை அருகேயுள்ள திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் விவேகானந்தா் ஜெயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு திருச்சி, திருப்பராய்த்துறை, ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் தலைவா் சுவாமி சுத்தானந்தா தலைமை... மேலும் பார்க்க

அரசின் அலட்சியத்தால் இஸ்லாமியா்களின் வழிபாடு சட்டப் பிரச்னையானது!

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தமிழக அரசின் அலட்சியத்தால் இஸ்லாமியா்களின் வழிபாடு சட்டப் பிரச்னையாக மாறி உள்ளது என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் ம... மேலும் பார்க்க