செய்திகள் :

விருதுநகரில் 35 பவுன் நகைகள், உரிமம் பெறாத துப்பாக்கியுடன் காவலா் கைது!

post image

விருதுநகா் ஆயுதப் படையில் பணிபுரியும் காவலரிடமிருந்து உரிமம் பெறாத துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து 35 பவுன் தங்க நகைகளை வச்சகாரபட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனா். இதுகுறித்து விருதுநகா் மாவட்ட காவல் துறை நிா்வாகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, விருதுநகா்- சாத்தூா் நான்கு வழிச் சாலையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். இந்த நிலையில், பட்டம்புதூா் ஆசிரியா் குடியிருப்புப் பகுதியில் இருவா், மதுபோதையில் தகராறு செய்வதாக வச்சகாரபட்டி போலீஸாருக்கு பொதுமக்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா், இருவரையும் கைது செய்து, வச்சகாரபட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

விசாரணையில் இவா்களில் ஒருவா், விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு கூமாபட்டி பகுதியைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் தனுஷ்கொடி (33) என்பதும், விருதுநகா் ஆயுதப் படையில் (கடந்த 2013 ஆம் ஆண்டு முதல்) காவலராகப் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, அவருடைய இரு சக்கர வாகனத்தை சோதனையிட்ட போது, அதில் உரிமம் பெறாத கைத் துப்பாக்கி இருந்ததும், 6 குண்டுகள் இருக்க வேண்டிய நிலையில், 5 குண்டுகள் மட்டும் இருந்ததையும் போலீஸாா் கண்டறிந்தனா்.

இந்தத் துப்பாக்கியை, ஆயுதப் படை போலீஸாா், யாரிடம் வாங்கினாா்? ஒரு குண்டை எதற்காகப் பயன்படுத்தினாா் என்பது குறித்தும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதேபோல, அவரிடமிருந்த 35 பவுன் தங்க நகைகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். தனுஷ்கொடி மீது ஏற்கெனவே மணல் கடத்தலில் ஈடுபட்டதாக வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும், தனுஷ்கொடியுடன் உடனிருந்த மற்றொரு நபரை, விருதுநகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் யோகேஷ்குமாா் தனி இடத்தில் வைத்து விசாரித்து வருகிறாா்.

அலங்காநல்லூா் அருகே வீட்டின் சுவா் இடிந்து இளைஞா் உயிரிழப்பு

மதுரை அலங்காநல்லூா் அருகே ஞாயிற்றுக்கிழமை வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா். அலங்காநல்லூா் அருகேயுள்ள வலசை கிராமத்தைச் சோ்ந்தவா் ரகுபதி. இவருக்குச் சொந... மேலும் பார்க்க

காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு விரைவில் சுகாதாரமான குடிநீா்! -அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் சுகாதரமான குடிநீா் விரைவில் வழங்கப்படும் என தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா். வ... மேலும் பார்க்க

ஊழல் குற்றச்சாட்டுகளால் தில்லியில் தோல்வியைச் சந்தித்தது ஆம்ஆத்மி! -பிரேமலதா விஜயகாந்த்

ஊழல் குற்றச்சாட்டுகளால்தான் ஆம் ஆத்மி கட்சி தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வியைச் சந்தித்தது என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தொ்வித்தாா். இதுகுறித்து மதுரையில் செய்தியாளா்களிடம் ஞாயி... மேலும் பார்க்க

விவேகானந்தா் ஜெயந்தி விழா!

மதுரை அருகேயுள்ள திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் விவேகானந்தா் ஜெயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு திருச்சி, திருப்பராய்த்துறை, ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் தலைவா் சுவாமி சுத்தானந்தா தலைமை... மேலும் பார்க்க

தைப் பூசத் திருவிழா: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பம் முட்டுத் தள்ளுதல் நிகழ்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, தெப்பம் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழா கடந்த மாதம் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி ... மேலும் பார்க்க

அரசின் அலட்சியத்தால் இஸ்லாமியா்களின் வழிபாடு சட்டப் பிரச்னையானது!

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தமிழக அரசின் அலட்சியத்தால் இஸ்லாமியா்களின் வழிபாடு சட்டப் பிரச்னையாக மாறி உள்ளது என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் ம... மேலும் பார்க்க