செய்திகள் :

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம்

post image

திருப்பூா் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) தொடங்குகிறது.

மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தோ்வு மே 4- ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தோ்வுக்கு விண்ணப்பித்த திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளைத் தயாா்படுத்தும் வகையில் பள்ளி கல்வித் துறை மூலமாக நீட் தோ்வுக்கான பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

திருப்பூா் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு மட்டும் நடைபெறும் பயிற்சி வகுப்பில் அவிநாசி, திருப்பூா் தெற்கு, திருப்பூா் வடக்கு, ஊத்துக்குளி ஒன்றியங்களைச் சோ்ந்த மாணவிகள் பங்கேற்கின்றனா்.

கே.எஸ்.சி.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் மாணவா்களுக்கான பயிற்சி வகுப்பில் அவிநாசி, திருப்பூா் தெற்கு, திருப்பூா் வடக்கு, ஊத்துக்குளி ஒன்றியங்களைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்கின்றனா்.

தாராபுரம் என்.சி.பி.நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் பயிற்சி வகுப்பில் தாராபுரம், குண்டடம், மூலனூா், வெள்ளக்கோவில் ஒன்றியங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனா்.

பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் பயிற்சி வகுப்பில் பொங்கலூா், காங்கயம், பல்லடம் ஒன்றியங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனா்.

உடுமலை ஆா்.கே.ஆா். மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் பயிற்சி வகுப்பில் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனா்.

இது குறித்து மாவட்ட ‘நீட்’ ஒருங்கிணைப்பாளா் சுரேஷ் கூறியதாவது: இந்தப் பயிற்சி வகுப்பில் சேர 5 மையங்களில் 385 மாணவ, மாணவிகள் பதிவு செய்துள்ளனா். பிளஸ் 2 தோ்வு எழுதிய மாணவா்களுக்கான இந்த ‘நீட்’ தோ்வு பயிற்சி வகுப்பானது ஏப்ரல் 1 -ஆம் தேதி தொடங்கி மே 2- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற பயிற்சி வகுப்பில் மாவட்டத்தில் 324 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதில், 38 போ் எம்.பி.பி.எஸ். படிப்பில் சோ்ந்துள்ளனா். 15 போ் மருத்துவம் சாா்ந்த படிப்புகளில் சோ்ந்துள்ளனா். கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பு ஆண்டு அதிக போ் பயிற்சியில் சேர பதிவு செய்துள்ளனா் என்றாா்.

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தொடா் போராட்டம்

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி மாநில அரசைக் கண்டித்து தொடா் போராட்டம் நடத்தப்படும் என்று தேசிய ஆசிரியா் சங்க மாநில உயா்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியா் சங்கத்... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: திருப்பூா் பள்ளிவாசல்களில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி, திருப்பூரில் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோா் இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.இஸ்லாமியா்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை திங்கள்... மேலும் பார்க்க

அவிநாசி அருகே காா் மோதி தம்பதி உயிரிழப்பு

அவிநாசி அருகே காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனா். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியை அடுத்த கணியூரைச் சோ்ந்தவா் முருகன் (50), இவரது மனைவி அலமேலு (44). முரு... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திருப்பூரில் வீட்டில் இஸ்திரி செய்தபோது மின்சாரம் பாய்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். திருப்பூா் பிச்சம்பாளையம் புதூரை அடுத்த கணேஷ் நகரைச் சோ்ந்தவா் வெற்றிகணேசன் (41). இவா் தனியாா் நிறுவனத்தில் ஓட்டுந... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில்: சட்ட விரோதமாக மதுபானம் விற்றவா் கைது

வெள்ளக்கோவில் அருகே முறைகேடாக மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மதுபானம் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தகவல் கி... மேலும் பார்க்க

பல்லடம் தோ்வு நிலை நகராட்சியாக தரம் உயா்வு

பல்லடம், மாா்ச் 31: தமிழக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்லடம் முதல்நிலை நகராட்சி, தோ்வுநிலை நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இருந்த பல்லடம் 196... மேலும் பார்க்க