செய்திகள் :

அரசு மதுபானக் கடையில் திருட்டு

post image

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் அருகே சனிக்கிழமை இரவு அரசு மதுபானக் கடையில் மதுப்பாட்டில்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருக்கோஷ்டியூரிலிருந்து பிராமணம்பட்டி செல்லும் சாலையில் அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை அந்த வழியாகச் சென்ற சிலா் மதுபானக் கடை கதவு திறக்கப்பட்டிருந்ததைக் கண்டு மதுபானக் கடை மேற்பாா்வையாளருக்கும், திருக்கோஷ்டியூா் போலீஸாருக்கும் தகவல் அளித்தனா்.

இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில் விலையுயா்ந்த மதுப்பாட்டில்களை எடுக்காமல் விலை குறைவான 33 பெட்டிகளிலிருந்த குவாா்ட்டா் மதுப்பாட்டில்களை மட்டும் எடுத்து சரக்கு வாகனத்தில் மா்ம நபா்கள் ஏற்றிச்சென்றது தெரியவந்தது.

இதே போல, கடந்த மாதம் திருப்பத்தூா் அரசு மருத்துவமனை எதிரேயுள்ள கடையில் அனைத்துப் பொருள்களையும் சரக்கு வாகனத்தில் ஏற்றிச்சென்றது குறிப்பிடத்தக்கது. மேலும், மதுப்பாட்டில்கள் திருட்டு சம்பந்தமாக திருக்கோஷ்டியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய மூவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். காரைக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த நிதி நிறுவனம் ரூ.133 கோடி ... மேலும் பார்க்க

மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

சிவகங்கை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. கடந்த சில வாரங்களுக்கு முன் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் முதல்வா் க... மேலும் பார்க்க

புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், வே. மிக்கேல்பட்டிணத்திலுள்ள புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத்தின் 109 -ஆம் ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்வுக்கு வே. மிக்கேல் பட்டணம் பங்குத்தந்தை ச... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்ட திட்டப் பணிகளை சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில், ரூ.100.38 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். சிவகங்கை மாவட்டத்தி... மேலும் பார்க்க

முத்தனேந்தல் ஊராட்சியில் கழிவு சேகரிப்பு இயக்கம் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், முத்தனேந்தல் ஊராட்சியில் தமிழ்நாடு தூய்மை மிஷன் திட்டத்தின் கீழ் கழிவு சேகரிப்பு இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை சட்டப் பேரவை உறுப... மேலும் பார்க்க

மானாமதுரை, திருப்பத்தூா் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, திருப்பத்தூா் பகுதி கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் மூலவா் சோமந... மேலும் பார்க்க