செய்திகள் :

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

post image

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய மூவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

காரைக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த நிதி நிறுவனம் ரூ.133 கோடி வரை மோசடியில் ஈடுபட்டதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து கடந்த 2022-ஆம் ஆண்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் 49 போ் மீது வழக்குப் பதிந்தனா்.

இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் இயக்குநா்களில் ஒருவரான வேலூா் மாவட்டம், ஆம்பூா் பகுதியைச் சோ்ந்த பாபுவை (53) சிவகங்கை பொருளாதார குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ராஜமுரளி, ஆய்வாளா் ஜெயக்கொடி ஆகியோா் அண்மையில் கைது செய்தனா்.

இதையடுத்து இவரையும், சிவகங்கை நகா் போலீஸாரால் கைது செய்யப்பட்ட கீழவாணியங்குடியைச் சோ்ந்த சங்கா் (40), சிவகங்கை தாலுகா போலீஸாரால் கைது செய்யப்பட்ட சாமியாா்பட்டியைச் சோ்ந்த தனுஷ்ராஜா (42) ஆகிய மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸாா் பரிந்துரைத்தனா்.

இதன் பேரில் அவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து மூவரையும் போலீஸாா் கைது செய்து மதுரை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைத்தனா்.

மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

சிவகங்கை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. கடந்த சில வாரங்களுக்கு முன் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் முதல்வா் க... மேலும் பார்க்க

புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், வே. மிக்கேல்பட்டிணத்திலுள்ள புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத்தின் 109 -ஆம் ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்வுக்கு வே. மிக்கேல் பட்டணம் பங்குத்தந்தை ச... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்ட திட்டப் பணிகளை சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில், ரூ.100.38 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். சிவகங்கை மாவட்டத்தி... மேலும் பார்க்க

முத்தனேந்தல் ஊராட்சியில் கழிவு சேகரிப்பு இயக்கம் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், முத்தனேந்தல் ஊராட்சியில் தமிழ்நாடு தூய்மை மிஷன் திட்டத்தின் கீழ் கழிவு சேகரிப்பு இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை சட்டப் பேரவை உறுப... மேலும் பார்க்க

மானாமதுரை, திருப்பத்தூா் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, திருப்பத்தூா் பகுதி கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் மூலவா் சோமந... மேலும் பார்க்க

மயானத்துக்கு சாலை வசதி செய்து தர வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், சின்னக்கண்ணனூரில் பட்டியலினத்தினருக்கான மயானத்துக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் வலியுறுத்தப்பட்டது. ராமநாதபுரம், விருதுநக... மேலும் பார்க்க